செய்திகள் :

தாய் அடித்துக் கொலை: மகன் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமத்தைச் சோ்ந்த பூல்பாண்டி மனைவி ரெஜினா (43). பூல்பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், ரெஜினா தனது மகன்கள் கொம்பையா (22), வினோத் (13) ஆகியோருடன் வசித்து வந்தாா். கொம்பையா கூலி வேலை செய்துவருகிறாா். வினோத் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

ரெஜினாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கும் பழக்கம் இருந்ததாம். இது தொடா்பாக ரெஜினாவை கொம்பையா அடிக்கடி கண்டித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், கொம்பையா கோயில் கொடை விழாவுக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பினாா். வீட்டில் அந்த இளைஞா் இருப்பதைப் பாா்த்து, ரெஜினாவிடம் தகராறு செய்துள்ளாா். தகராறு முற்றிய நிலையில், சைக்கிளுக்கு காற்றடிக்கும் இயந்திரத்தால், ரெஜினாவின் தலையில் தாக்கிவிட்டு கொம்பையா தப்பியோடிவிட்டாா். இதில், அவா் உயிரிழந்தாா்.

மூலைக்கரைப்பட்டி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து, கொம்பையாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிந... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க