திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குக்கு நிா்வாக அனுமதி பெறும் நிகழ்ச்சி
திண்டுக்கல்: தாய் இல்லாத கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்.. நெகிழவைக்கும் சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றெடுத்த பின்னர் பசு மாடு இறந்து விட்டது.
இதனால் அவ்வப்போது அந்த கன்றுக்குட்டிக்கு பாட்டிலில் பால் கொடுத்து வந்தனர். சில நேரங்களில் அவ்வாறு பால் கிடைக்காததால் கன்றுக்குட்டி பாலுக்காக ஏங்கி அப்பகுதியில் சுற்றித்திரியும் அந்த சமயத்தில் அங்கிருக்கும் நாய் ஒன்றின் பாலை அருந்த துவங்கியுள்ளது.

நாயும் அந்த கன்றுகுட்டியை தன் குட்டிகளுக்கு பால் குடிப்பது போல நினைத்து பால் அருந்த அனுமதித்துள்ளது. இதை தொடர்ந்து நாள்தோறும் கன்றுக்குட்டிக்கு அந்த நாய் பால் கொடுக்கத் துவங்கியது.
தற்போது தினமும் காலை மாலை நேரங்களில் தாயில்லாத கன்றுக்குட்டிக்கு நாயே தாயாக மாறி தன் குழந்தைக்கு பால் கொடுப்பது போல பாசத்துடன் பால் கொடுத்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாயை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.