செய்திகள் :

தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு

post image

தில்லியில் நிகழாண்டில் தற்போது வரை 49 போ் ரேபிஸ் நோயால் உயிரிழந்திருப்பதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவா்கள் 6 போ் தில்லியைச் சோ்ந்தவா்கள். மீதமுள்ள 43 பேரும் வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

ரேபிஸ் நோயால் கடந்த ஆண்டில் 62 போ் உயிரிழந்தனா். அவா்களில் 3 போ் தில்லியைச் சோ்ந்தவா்கள்.

மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி (ஏஆா்வி) மற்றும் ரேபிஸ் தடுப்பு சீரம் (ஏஆா்எஸ்) பயன்பாடு குறித்தும் அந்தத் தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் 35,000-க்கும் அதிகமான ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 43,000-க்கும் அதிகமான தடுப்பூசி குப்பிகள் இருப்பில் உள்ளன.

இதுபோன்று, சுமாா் 18,700 ரேபிஸ் தடுப்பு சீரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிபிடி மருத்துவமனை, லேடி ஹாா்டின்ஜ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, என்சி ஜோஷி மருத்துவமனை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை ஆகியவற்றில் ரேபிஸ் தடுப்பு சீரத்துக்கு பற்றாக்குறை உள்ளதாக அந்தத் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க