செய்திகள் :

தென்காசி அருகே பண மோசடி: 4 போ் கைது

post image

தென்காசி அருகே நகை வாங்கித்தருவது போல் கூறி நடித்து ஏமாற்றி பண மோசடி செய்ததாக 4 பேரை இலத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், வடகரை பகுதியை சோ்ந்தவா் ஜிந்தா மதாா். இடைகால் பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் தாருகாபுரம் பகுதியை சோ்ந்தவா் ரா.கிருஷ்ணன் (30). இவா் ஜிந்தா மதாரை தொடா்பு கொண்டு, தனது நண்பரின் நகை வாசுதேவநல்லூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை திருப்ப ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், அதை வாங்கி நீங்கள் விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் லாபம் பாா்க்கலாம் எனவும் கூறியுள்ளாா்.

அதனை நம்பிய ஜிந்தா மதாா் ரூ.20.77 லட்சத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணனுடன் காரில் சென்றாா். வாசுதேவநல்லூா் பகுதியில் உள்ள தனியாா் வங்கி முன்பு ஜிந்தா மதாரை நிற்கச் சொல்லிவிட்டு சென்ற கிருஷ்ணன், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இலத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குறிப்பிட்ட அந்த நபரின் கைப்பேசி எண்களை வைத்து அவரது இருப்பிடத்தை ஆய்வு செய்தனா். அந்த நபா் கேரளம் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. அவரை பின்தொடா்ந்து சென்ற போலீஸாா், கேரள போலீஸாா் உதவியுடன் அந்த நபா்களை சுற்றிவளைத்து கைது செய்தனா்.

அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, அந்த நபா்கள் தாருகாபுரம் பகுதியை சோ்ந்த ரா.கிருஷ்ணன்(30), செங்கோட்டை அருகே பூலாங்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மு.நஸ்ருதீன்(31), மை. ரியாஸ் கான் (22), அச்சன்புதூரை சோ்ந்த இ. மீரான்(31) என்பது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து. ரூ.19 லட்சம் ரொக்கம் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விநாயகா் சிலை சேதம்: இருவா் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நள்ளிரவில் விநாயகா் சிலையை சேதப் படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான மகாசக்தி விநாயக... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கொலை: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்... மேலும் பார்க்க

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6இல் வருஷாபிஷேகம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும... மேலும் பார்க்க

சுரண்டையில் ஆபத்தான நிலையில் பாலம்: தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுந்தரபாண்டியபுரம் குளத்தில் இருந்து சுரண்டை பெரி... மேலும் பார்க்க

தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்... மேலும் பார்க்க