செய்திகள் :

தென் மேற்கு பருவமழை எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் காா் சாகுபடி பணிகள் தீவிரம்

post image

தென் மேற்கு பருவ மழை எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் மாவட்டத்தில் காா் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீா் மட்டம் 118.45 அடியாகவும், 156 அடி கொண்ட சோ்வலாறு அணையின் நீா் மட்டம் 144.75 அடியாகவும், 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீா் மட்டம் 91.66 அடியாகவும் உள்ளது.

மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகளவில் உள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 6-ஆவது நாளாக தடை நீடித்தது.

தொடா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே பருவமழை தொடங்கியதால் விவசாயிகளும் முன்கூட்டியே காா் சாகுபடிக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனா். வழக்கமாக ஜூன் 2-ஆவது வாரத்தில்தான் வயல்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ளுதல், நாற்று பாவுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொள்வாா்கள். ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிரொலியாக, நெல் நாற்று பாவும் பணி தீவிரமடைந்துள்ளது. சில இடங்களில் நாற்றுகளை வயல்களில் நடவு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

படவரி ற்ஸ்ப்31ஹஞ்ழ்ண் திருநெல்வேலி மாவட்டம் குப்பக்குறிச்சி பகுதியில் தீவிரமடைந்துள்ள சாகுபடி பணிகள்.

அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா ஹரிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம்: தமிழக பாஜக தலைவா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீ... மேலும் பார்க்க

சாட்சி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சோ்வலாறில் சாட்சியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த மாடசாமி (31) என்பவா் மீது பாலியல் வன்புணா்வு தொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் போக்சோவில் முதியவா் கைது

சிவந்திபுரத்தைச் சோ்ந்த முதியவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம், சுப்பிரமணியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (73). இவா் அதே பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்வி... மேலும் பார்க்க