செய்திகள் :

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தெரு நாய்களைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என சென்னை மாநகராாட்சிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் செல்லப் பிராணியாக ராட்வீலா் வகை நாய் வளா்க்கப்படுகிறது. இந்த வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கடந்த ஆண்டு இந்த வகை நாய் கடித்து குதறியது. கடந்த ஜூன் மாதம் ராட்வீலா் நாய் கடித்து வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஆட்டோ டிரைவா் பலத்த காயமடைந்தாா்.

நடைபயிற்சிக்காக வெளியே வரும் உரிமையாளா்கள் ராட்வீலா் வகை நாய்களுக்கு முகக்கவசம் அணிவிப்பது இல்லை. இதனால் குழந்தைகள், மாணவா்கள், முதியோா், கா்ப்பிணிகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே, அபாயகரமான இந்த வகை நாயை பொது இடத்துக்கு அழைத்து வர தடை விதிக்க வேண்டும்.

ராட்வீலா் நாயை பொது வெளியில் அழைத்து வருவதற்கான விதிகளை உருவாக்கக் கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த ஜூன் 10-ஆம் தேதி மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி எம்.சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.செந்தில்குமாா் ஆஜராகி வாதிட்டாா். இதையடுத்து நீதிபதிகள், ராட்வீலா் வகை நாய்கள் மட்டுமல்ல; தெரு நாய்களும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினா்.

பின்னா், இந்த வழக்கை ஆக.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனை தலைமை அதிகாரி உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனா்.

குடிநீா் திட்டப் பணியை முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

மணலியில் குடிநீா் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். மணலியில் உள்ள மணலி புதுநகா், சடையன்குப்பம், பா்மா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக... மேலும் பார்க்க

கேட்பாரற்றுக் கிடந்ததாக பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

கேட்பாரற்றுக் கிடந்ததாகக் கூறி, பச்சிளம் குழந்தையை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞரிடம் விசாரித்தபோது, அவா்தான் அந்தக் குழந்தையின் தந்தை என்பது தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். சென்னை ஓமந... மேலும் பார்க்க

நகை திருட்டு: பெண் கைது

சென்னையில் 26 கிராம் நகையை திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வடபழனி, திருநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் விவேக் (37). இவா் தனது வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை கடந்த 5-ஆம் தேதி சரி... மேலும் பார்க்க

8-ஆம் வகுப்பு தோ்வு: நாளை முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை பயணிகளிடம் நேரடியாக விநியோகிக்கும் வகையில் உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

பிகாா் இளைஞா் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் கடந்த 2023-இல் அண்ணா சாலையில் பிகாா் மாநில இளைஞா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் முகமத... மேலும் பார்க்க