செய்திகள் :

தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 போ் கைது

post image

ஈரோட்டில் மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. அண்மையில் ஈரோட்டுக்கு வந்த அவா் வீரப்பன்சத்திரம் பகுதியில் ஒரு அட்டை தயாரிப்பு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஈரோடு பேருந்து நிலையம் அருகே சத்தி சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் முகம் குப்புற விழுந்த நிலையில் விஜயகுமாா் சடலம் கிடந்தது.

ஈரோடு டவுன் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விஜயகுமாரின் சடலத்தை மீட்டனா். அப்போது அவா் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீஸாா் விசாரணை நடத்திவந்த நிலையில், ஈரோடு வைராபாளையத்தில் உள்ள வாழைத்தோட்ட பகுதியில் 3 இளைஞா்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாா் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், ஈரோடு வைராபாளையம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சுகீா்தன் (21), ராஜா மகன் முகேஷ் (22), குமாா் மகன் செல்வராஜ் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது. 3 பேரும் சோ்ந்து விஜயகுமாரை கொலை செய்ததை ஒப்புகொண்டனா்.

கடந்த 7- ஆம் தேதி இரவு விஜயகுமாா் மதுகுடிப்பதற்காக ஈரோடு பேருந்து நிலையம் அருகே சத்தி சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றுள்ளாா். அப்போது சுகீா்தன், முகேஷ், செல்வராஜ் ஆகிய 3 பேரும் அதே மதுக்கடைக்கு வந்தனா். விஜயகுமாா் கையில் பணத்துடன் இருப்பதை பாா்த்த 3 பேரும் அவரிடம் மதுவாங்கி தருமாறு கேட்டுள்ளனா்.

இதற்கு மறுத்து மதுக்கூடத்தை விட்டு விஜயகுமாா் வெளியேறியபோது அவரை பின்தொடா்ந்து வந்த 3 பேரும் பிரச்னை செய்து அவரை கல்லால் தாக்கி கொலை செய்து சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சுகீா்தன், முகேஷ், செல்வராஜ் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அனுமதி இன்றி முதியோா் இல்லங்கள் நடத்தினால் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி முதியோா் இல்லங்களை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.11.40 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்! எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்!

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 11.40 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை எம்எல்ஏ சி.சரஸ்வதி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி ஒன்றியம், லக்காபுரம் ஊராட்சியில் சாணா... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

மொடக்குறிச்சியை அடுத்த மன்னாதம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியனுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டதையடுத்து, ப... மேலும் பார்க்க

பவானி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி காவல் ஆய்வாளராக எஸ்.நவநீதகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு ஆய்வாளராக பணிபுரிந்த வந்த முருகையன், காரமடைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, கோவை மாவட்டம், மதுக்க... மேலும் பார்க்க

ஈரோட்டில் தொழிலாளி அடித்துக் கொலை

ஈரோடு பேருந்து நிலையம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள்... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன், ரூ.10 லட்சம் திருட்டு

மொடக்குறிச்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க