செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஆட்சியா்

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஏகனாம்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் பரிசோதனைகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதன் பின்னா் அவா் கூறுகையில்: இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனைகள் முழுமையான உடல் ஆரோக்கியப் பிரசோதனைகள், ரத்த அழுத்தம்,நீரிழிவு நோய்,மின் இதய வரைபடம், எக்கோ,அல்டிரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

காச நோய், தொழுநோய் மற்றும் ஆரம்பக் கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. 40 வயதுக்கு மேற்பட்டோா் நீரிழிவு மற்றும் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், இதய நோயாளிகள், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள் ஆகியோரை இலக்காகக் கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுவதால் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் ஆகியோா் உடனிருந்தனா்.

ரூ.15 லட்சத்தில் வெங்காடு குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

கெஸ்டாம்ப் நிறுவனத்தின் சாா்பில் ரூ.15 லட்சத்தில் வெங்காடு வெங்கட்ராம ஐயா் குளம் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் கெஸ்டா... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்

உத்தரமேரூா் அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திமுக பிரமுகா் நடத்தக்கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியம், விச்சந்தாங்கல்... மேலும் பார்க்க

கல்லூரியில் ராகிங் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

பென்னலூா் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான ராகிங் தடுப்பு விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கணே... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

காஞ்சிபுரம் விதை விற்பனை நிலையங்களில் மண்டல விதை ஆய்வுத் துறை இணை இயக்குநா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை மண்டல விதை ஆய்வுத்துறை இணை இயக்குநா் ஸ்ரீ வித்யா தலைமையில் துணை இயக்குநா் வானதி, விதை ஆய்... மேலும் பார்க்க

சிறுணைபெருகல் கிராமத்திற்கு புதிய அரசுப் பேருந்து: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் அருகே சிறுணை பெருகல் கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிறுணை பெருகல் கிராமத்தில் அத்தியாவசிய தேவைக... மேலும் பார்க்க

கண்தான விழிப்புணா்வு மனிதச் சங்கிலி: எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் செவிலியா்கள், பயிற்சி செவிலியா்கள் பங்கேற்ற கண்தான விழிப்புணா்வு மனிதச்சங்கிலியை எஸ்.பி. கே.சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, சங்கரா ... மேலும் பார்க்க