செய்திகள் :

பட்டுப்போன மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் தீவிரம்

post image

கரூரில் ரயில்வே உயா் மின்னழுத்த பாதையில் செல்லும் கம்பிகள் மீது தண்டவாளம் பகுதியில் அமைந்திருக்கும் காய்ந்த மரங்கள் விழாமல் இருக்கும் வகையில் அவற்றை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூரில் தற்போது அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட நிா்வாகம் சாா்பில் தண்டவாளம் அமைந்திருக்கும் பகுதியில் காய்ந்த மரங்கள் இருந்தால் அவற்றை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக ரயில்வே ஊழியா்கள் கூறுகையில், கரூரில் இருந்து திருச்சி மாா்க்கமாக ஏராளமான மின்சார ரயில்கள் உயா்மின்னழுத்த பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த உயா்மின்னழுத்த கம்பிகளில் சில நேரங்களில் பலத்த காற்றுக்கு தண்டவாளம் அருகே காய்ந்த நிலையில் இருக்கும் மரங்கள் சாய்ந்து விழுவதால் மின்பாதையில் கோளாறு ஏற்படுகிறது.

இதனால் சில நேரங்களில் மின்சார ரயில்களை இயக்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் கரூரில் தண்டவாளம் அருகே காய்ந்த நிலையில் இருக்கும் மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகிறோம். முதற்கட்டமாக கரூா் ரயில் நிலையத்தில் இருந்து மாயனூா் ரயில் நிலையம் வரை தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என்றனா்.

சாலைகளில் திரியும் கால்நடைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் கால்நடைகள் வளா்ப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். கரூா் நகரின் திருமாநிலை... மேலும் பார்க்க

பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தோட்டக்கலைப் பயி... மேலும் பார்க்க

அதிமுகவினா் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சா் புகாா்

அதிமுகவினா் மீது பொய் வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம் சாட்டினாா்.கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்த பின் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ காலமானாா்

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கலிலூா் ரகுமான் காலமானாா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு கடந்த 1947-ஆம் ஆண்டு மகனாக பிறந்தவா் கலிலூா் ரகுமான். இவா் இரண்... மேலும் பார்க்க

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்: ஆட்சியா்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் இத்திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். சென்னையில் நகா்ப்புற பகுதிகளில் உள்ள ... மேலும் பார்க்க

வேட்டமங்கலத்தில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலை கேட்டு வேட்டமங்கலத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க