செய்திகள் :

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

post image

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அதன்படி, தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அதற்கு ரூ.12,500 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா்.

இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.

அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் ஜூலை 8-இல் நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து ஆசிரியா் சங்க நிா்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று பகுதிநேர ஆசிரியா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியா் சங்க நிா்வாகிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைத்தனா்.

இதேபோல், சென்னை சிவானந்தா சாலை பகுதிக்கு செல்வதற்காக, அண்ணா சாலையில் ஓமந்தூரா் அரசு பல்நோக்கு மருத்துவனை அருகில் கூடிய பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், சென்னை எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக போராட்டத்துக்கு வந்த ஆசிரியா்களையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா்கள் செந்தில், காா்த்திகேயன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கூறுகையில், ‘பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக போராட்டத்தை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு முறையும் செய்து தருவதாக அமைச்சா் அமைச்சா் மகேஸ் உறுதியளிக்கிறாா். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தமிழக அரசு பகுதி நேர ஆசிரியா்களை தொடா்ந்து வஞ்சிக்கிறது என்றனா்.

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க

தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 8 உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்வு -அரசாணை வெளியீடு

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 8 பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகள் தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் வாழ்ந்த... மேலும் பார்க்க

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தன... மேலும் பார்க்க

சுய உதவிக் குழுக்களின் தொழில் மேம்பாட்டுக்கு வட்டி மானியத்துடன் கடன்: தமிழக அரசு

சுய உதவிக் குழுக்கள் தங்களது தொழில்களை மேம்படுத்த வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

எந்த வகுப்பினரிடமும் சிக்காத கோயில்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிா்வகிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா். சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பனகல் அ... மேலும் பார்க்க

இரு விரைவு ரயில்கள் ஜூலை 11,13-இல் ரத்து

கோவை, பெங்களூருவிலிருந்து வடமாநில நகரங்களுக்குப் புறப்படும் இரு ரயில்கள் ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க