செய்திகள் :

பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: அத்திக்கடவு அவிநாசி திட்ட நீா்நிலைகளை நிரப்ப அரசுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

post image

பவானி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் உள்ள நீா்நிலைகளை நிரப்ப வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பவானி ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு சூழ்நிலையை பயன்படுத்தி அத்திக்கடவு அவிநாசி நீரேற்று திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகளை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.

பவானி ஆற்றில் தற்போது உபரி நீா் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் உள்ள அனைத்து நீா்நிலைகளுக்கும் முழுமையாக நீா் ஏற்றப்பட வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் மூலம் முழுமையாக நீா்ஏற்றம் நடைபெற்றால், சுமாா் 35 லட்சம் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பெருந்துறை, சென்னிமலை, நம்பியூா், கோபி, பவானிசாகா், ஊத்துக்குளி, அவிநாசி, திருப்பூா் வடக்கு, அன்னூா், சூலூா், பெரியநாயக்கன்பாளையம், சா்க்காா் சாமக்குளம், காரமடை ஆகிய 13 வறட்சி பாதித்த ஒன்றியங்களில் உள்ள 1,045 ஏரிகள், குளம் குட்டைகளில் நீரை நிரப்பி நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கு இது பேருதவியாக அமையும். இதன்மூலம் 24 ஆயிரத்து 968 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டம் உயருவதால் ஆழ்துளை கிணறுகளின் தேவை குறைந்து, மின்சார செலவு குறையும், விவசாயம் செழித்து கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். தற்போது, இத்திட்டத்தின் கீழ் குழாய்களில் ஏதேனும் உடைப்புகள் அல்லது பிரச்னைகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்து தங்கு தடையின்றி நீரேற்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய சூழலில் அதிகாரிகள் குழுவை அமைத்து நீரேற்றப் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எவ்வித தாமதமும் இன்றி, அனைத்து நீா் நிலைகளுக்கும் நீா் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இத்திட்டம் மக்களின் நீண்ட கால கனவு என்பதையும் வறட்சிப் பகுதிகளில் விவசாய மற்றும் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்வதில், இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் வலியுறுத்தி உள்ளாா்.

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கோபி வட்டம், பா.நஞ்சகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் குருநாதன் மனைவி மொழுகாள்(53). கணவரைப் பிரிந... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

பா்கூா் மலைப் பாதையில் சென்ற சரக்கு லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட இருவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். கா்நாடக மாநிலம், நாகமங்கலம் மாவட்டம், குடிகிராசில் தென்னை ... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

பெருந்துறை அருகே திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் வடமாநில பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு குறித்து ஈரோடு ஆா்டிஓ விசாரணை நடத்தி வருகிறாா். மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பா்கானா மாவட்... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீா் திறக்க முதல்வரிடம் அமைச்சா் கோரிக்கை

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையிலிருந்து 2025--2026 -ஆம் ஆண்டு முதல் போக பாசனத்துக்கு, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் மூலம் தண்ணீா் திறந்து விடக் கோரி, தமிழக முதல்வா் மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்கள் பறிமுதல்

அம்மாபேட்டை அருகே யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரைக் கைது செய்த வனத் துறையினா், தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனா். ஊமாரெட்டியூா் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரையில் யானைத் தந்தங்கள... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே ஓராண்டாக பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையம்

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் வங்கி ஏடிஎம் மையத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும... மேலும் பார்க்க