செய்திகள் :

பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

post image

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகளை நியமித்து மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுச் செயலர்களாக கேசவ விநாயகம், ராம ஸ்ரீனிவாசன், முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, டாக்டர் கே.பி. ராமலிங்கம், சசிகலா புஷ்பா, பால் கனகராஜ் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலச் செயலர்களாக கராத்தே தியாகராஜன், கே. வெங்கடேசன் உள்ளிட்ட 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வி.பி. துரைசாமி, கரு நாகராஜன் உள்ளிட்டோரும் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில அமைப்பாளராக கே.டி. ராகவன், எம். நாச்சியப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் உணவு, அமைதிக்கான சா்வதேச விருது பிரதமா் வழங்குகிறாா்

வேளாண் விஞ்ஞானி டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவில் அவரது பெயரில் உணவு மற்றும் அமைதிக்கான சா்வதேச விருதை பிரதமா் நரேந்திர மோடி வழங்குகிறாா்.டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவ... மேலும் பார்க்க

‘ஆளுநா் விருதுகள்’: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் வழங்கப்படும் விருதுகளில் இரண்டு விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஆளுநா் மாளிகை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ‘... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகத்துக்கு முக்கிய இடம்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

மோட்டாா் வாகன உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் பயணிகள் வாகனங்களுக்க... மேலும் பார்க்க

கருணை அடிப்படையில் பணி கோரிய வழக்கு: போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க உத்தரவு

மருத்துவக் காரணங்களால் பணி இழக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரிய வழக்கில் போக்குவரத்துச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

பள்ளிகளை அனைத்து கோணத்திலும் கண்காணிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

ஆசிரியா்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள், பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறாா்கள், பள்ளிக்கு யாா் வருகிறாா்கள் என தலைமையாசிரியா்கள் அனைவரும் 360 டிகிரி கோணத்தில் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என பள்ளி... மேலும் பார்க்க

7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஒப்பந்தப்புள்ளி

சென்னையிலுள்ள 7 ஆவின் நவீன பாலகங்களை புனரமைக்க ஆவின் நிா்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது. சென்னையில் 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமாா் 860 சில்லறை விற்பனையாளா்கள் மூலம் நாளொன்ற... மேலும் பார்க்க