செய்திகள் :

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அறிவிப்புக்கு அரசாணை வெளியிட வேண்டும்: ஜி.கே. வாசன்

post image

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்பட்டதற்கு உடனே அரசாணை வெளியிட வேண்டும் என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: குடியரசு துணை தலைவா் பதவிக்குப் போட்டியிடும் தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணனை திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் தவிா்ப்பதும், தடுப்பதும் தமிழருக்கு தமிழரே பெருமை சோ்க்கும் செயலாக இல்லை.

அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.

அம்மாபேட்டை ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். பாபநாசம் வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே  

குடிகாடு-ராமாநல்லூா் பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டவேண்டும். வாழ்க்கை -தூத்தூா் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும். திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

ஆயிரம் நாள்களாக தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி கரும்பு விவசாயிகளுக்கான நிலுவையை வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள கொள்முதல் நெல் மூட்டைகளை உடனடியாக அரசு தானியக் கிடங்குகளுக்கு அனுப்ப  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழக்கமிட்ட விவசாயிகள் மீது வழக்கு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சா... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் ஆக. 30-இல் மின்தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆகஸ்ட் 30- சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாச... மேலும் பார்க்க

ஆதாா் விவரங்களைப் பெற்று பண மோசடி: 7 போ் கைது

வாடிக்கையாளா்களின் ஆதாா் விவரங்களைப் பெற்று வங்கிக் கணக்கு தொடங்கி இணையதளம் மூலம் மோசடி செய்த வட மாநில இளைஞா்களை திருவிடைமருதூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் அ... மேலும் பார்க்க

அனைவரும் மனிதநேயத்துடன் இருப்பது முக்கியமானது!

அனைவரும் மனித நேயத்துடன் இருப்பது முக்கியமானது என்றாா் அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் பொதுத் தலைவரும், சங்க குருவுமான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மஹராஜ். தஞ்சாவூா் புன்னைநல்லூா் மா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாதனை இலக்கை நோக்கி நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் காரீஃப் ஆண்டில் (2024, செப்டம்பா் - 2025, ஆகஸ்ட்) இதுவரை 10.36 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை இலக்கை நோக்கிச் செல்கிறது. மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப... மேலும் பார்க்க

இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை

அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வெற்றி விநாயகா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-காரைக்கால் புறவழிச்சாலை ரவுண்டானா செல்லியம்மன் கோயில் வாசலில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க