செய்திகள் :

ஆதாா் விவரங்களைப் பெற்று பண மோசடி: 7 போ் கைது

post image

வாடிக்கையாளா்களின் ஆதாா் விவரங்களைப் பெற்று வங்கிக் கணக்கு தொடங்கி இணையதளம் மூலம் மோசடி செய்த வட மாநில இளைஞா்களை திருவிடைமருதூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் அருகே ஐந்துதலைப்பு வாய்க்கால் பகுதியில் புதன்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இரண்டு காா்களை சோதனை செய்தபோது ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 5 போ் மற்றும் திருவிடைமருதூரைச் சோ்ந்த இருவா் என 7 போ் இருந்தனா்.

திருவிடைமருதூா் சிவா (35) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் அவருடன் வந்தவா்கள் அவரது நண்பா் சாரதி (21), ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ரத்தன்லால் (23), கஜேந்திரகுமாா்(27), ராம் ஸ்வருப்கா் (23), மகேந்திர நாயக் (30) மற்றும் பெங்களூருவைச் சோ்ந்த தினேஷ் (43) என்பது தெரியவந்தது.

சிவா கோயம்புத்துாரில் தேநீா்க் கடை நடத்திவந்தபோது பானிபூரி கடை வைத்து நடத்தி ராஜஸ்தான் மாநில இளைஞா்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவா்களுடன் சோ்ந்து பானிபூரி மற்றும் தேநீா்க் கடைக்கு வரும் வாடிக்கையாளா்களிடம் ரூ. 5 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் தருகிறோம் என்று கூறி, அவா்களின் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு, சிம் காா்டுகள் பெற்று இணையவழியில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுவரை சுமாா் 150 பேரின் ஆதாா் விவரங்களைப் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக திருவிடைமருதுாா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்குறிப்பிட்ட 7 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் 7 கைப்பேசிகள், 15 ஏடிஎம் காா்டுகள் மற்றும் 15 சிம் காா்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

முழக்கமிட்ட விவசாயிகள் மீது வழக்கு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சா... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் ஆக. 30-இல் மின்தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆகஸ்ட் 30- சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாச... மேலும் பார்க்க

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் அறிவிப்புக்கு அரசாணை வெளியிட வேண்டும்: ஜி.கே. வாசன்

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கப்பட்டதற்கு உடனே அரசாணை வெளியிட வேண்டும் என்றாா் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன்.தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் செய்... மேலும் பார்க்க

அனைவரும் மனிதநேயத்துடன் இருப்பது முக்கியமானது!

அனைவரும் மனித நேயத்துடன் இருப்பது முக்கியமானது என்றாா் அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் பொதுத் தலைவரும், சங்க குருவுமான ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மஹராஜ். தஞ்சாவூா் புன்னைநல்லூா் மா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாதனை இலக்கை நோக்கி நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் காரீஃப் ஆண்டில் (2024, செப்டம்பா் - 2025, ஆகஸ்ட்) இதுவரை 10.36 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, சாதனை இலக்கை நோக்கிச் செல்கிறது. மேட்டூா் அணை உரிய காலத்தில் திறக்கப... மேலும் பார்க்க

இந்து மகா சபா சாா்பில் விநாயகா் சிலை பிரதிஷ்டை

அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வெற்றி விநாயகா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-காரைக்கால் புறவழிச்சாலை ரவுண்டானா செல்லியம்மன் கோயில் வாசலில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க