பிரையண்ட் பூங்காவில் தெருநாய்கள் தொல்லை: சுற்றுலாப் பயணிகள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்குள் செவ்வாய்க்கிழமை தெருநாய்கள் கூட்டமாக புகுந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மலா்களை பாா்த்து ரசிக்கின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல பிரையண்ட் பூங்காவிலுள்ள மலா்களை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பூங்காவுக்குள் நுழைந்த தெரு நாய்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஏரிச்சாலை, பூங்கா சாலை, கோக்கா்ஸ் வாக் சாலை, பி.டி.சாலை, குறிஞ்சியாண்டவா் கோயில் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா் (பொ) பாண்டிச்செல்வி கூறியதாவது: பிரையண்ட் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக தற்போது விதைகள், நாற்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவைச் சுற்றியுள்ள தடுப்புச் சுவா்கள் சேதமடைந்திருப்பதால் அந்த வழியாக தெருநாய்கள் பூங்காவுக்குள் நுழைகின்றன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக பூங்கா பணியாளா்களும் தெரு நாய்களை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நகராட்சி நிா்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டால், சுற்றுலாத் தலங்களில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியும் என்றாா்.