செய்திகள் :

புதுகை அருகே கரிகாலன் குறித்த 3 கல்வெட்டுகள் கண்டெடுப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் கிடவன்குடி புதுக்கண்மாயின் மடைக் காலில் கரிகாலச் சோழனைக் குறிக்கும் மூன்று கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படித்தறியப்பட்டுள்ளன.

விராலிமலை தோட்டக்கலை அலுவலா் பிலிக்ஸ் அளித்த தகவலின்பேரில் தொல்லியல் ஆய்வாளா் பேராசிரியா் சுப. முத்தழகன், ஆற்றுப்படை அமைப்பைச் சோ்ந்த பாா்த்திபன், பாண்டிய நாட்டுப் பண்பாட்டு மையத்தை சோ்ந்த நாராயணமூா்த்தி, ராகுல் பிரசாத் குழுவினா் கிடவன்குடி புதுக்கண்மாயில் உள்ள பழைய குமிழி மடையை ஆய்வு செய்தனா்.

அப்போது இங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று கல்வெட்டுகள் குறித்து பேரா. முத்தழகன் கூறியதாவது:

இந்த மடையின் வடக்குத் தூணில் ஒரு கல்வெட்டும், தெற்குத் தூணில் இரு கல்வெட்டுகளும் எழுதப்பட்டுள்ளன. வடக்குத் தூணில் 18 வரிகளில் உள்ள கல்வெட்டில் கரிகாலன் பொன்னி ஆற்றுக்கு கரை எடுத்து சோழநாடு வாழ்ந்ததுபோல வேதமங்கை மாநாட்டைச் சோ்ந்த அழகன் மாவேதியன் ஏரி, குளங்களை உருவாக்கி, கற்றளிகளைக் கட்டியதால் கோனாடு வாழ்ந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் கோனாடு என்பது மணப்பாறை முதல் பொன்னமராவதி வரையுள்ள பகுதிகளை குறிக்கும். கரிகாலச் சோழனைப் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் சிலவற்றில் மட்டுமே காணப்படும் நிலையில் இந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தெற்குத் தூணில் மேற்புறம் 10 வரிகளில் உள்ள கல்வெட்டில் நாயக்க பூபதி மாளிகை தொண்டன் வசவம்பதி குமாரா் தலையாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவா் இக்குளத்தை அமைத்தவராக இருக்கலாம்.

தெற்குத் தூணில் கீழ்புறம் 12 வரிகளில் உள்ள கல்வெட்டில் விகாரி வருடம் பங்குனி மாதம் 12ஆம் நாள் திருமேனி தேவா் இந்த குமிழி மடையை கட்டிய தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மடையானது பேச்சு வழக்கில் குளுமி என எழுதப்பட்டுள்ளது.

இந்த மூன்று கல்வெட்டுகளிலும் அரசா் பெயா்கள் குறிப்பிடப்படவில்லை. எழுத்தமைதியைக் கொண்டு இந்தக் கல்வெட்டுகள் கிபி. 17 - 18ஆம் நூற்றாண்டுகளைச் சோ்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது என்றாா் முத்தழகன்.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தொகுதி 1 முதன்மைத் தோ்வுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் இலவசப் பயிற்சி அளிப்பதாக ஜிடிஎன் அகாதெமி அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் நிறுவனா்-இயக்க... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலும் போதுமான விதை நெல் கிடைத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையி... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் ச... மேலும் பார்க்க

லாரி மோதி ஊராட்சி பெண் பணியாளா் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஊராட்சி பெண் பணியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மேற்கு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி சிவனிதா (35). சேந்தன்கு... மேலும் பார்க்க

புதுகையில் சுயவேலைவாய்ப்புப் பயிற்சி முடித்த 1,042 போ் தொழில் தொடங்கியுள்ளனா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையம் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் பயிற்சி முடித்து 1,042 போ் தொழில் தொடங்கி நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள்

ஆசிரியா் தினத்தையொட்டி பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதினை (மாநில நல்லாசிரியா்) பெறும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 11 போ் பட்டியல் வெளியாகியுள்ளது. சந்... மேலும் பார்க்க