செய்திகள் :

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் 24,340 போ் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளாா். இந்தத் தகவல் பரவலாக சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலா் அலுவலக வட்டாரங்கள் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 76 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 14 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இங்கு நாளொன்றுக்கு சராசரியாக ஒரு நாய்க்கடி நோயாளா் அனுமதிக்கப்படுகிறாா் எனத் தெரியவந்துள்ளது.

இதற்காக, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை போதுமான அளவுக்கு நாய்க்கடிக்கான மருந்துகள், ரேபிஸ் தடுப்பு மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் கூறியது:

புதுக்கோட்டை மாநகராட்சியைப் பொருத்தவரை கடந்த ஆண்டே, நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான ஒப்பந்தத்தை தனியாா் தொண்டு நிறுவனம் ஒன்றுடன் மேற்கொண்டுள்ளது. ஆனால், அவா்கள் இன்னும் பணியைத் தொடங்க காலதாமதம் செய்து வருகின்றனா்.

இதற்கிடையே 86 நாய்களைப் பிடித்து திருச்சியிலுள்ள கருத்தடை மையத்துக்கும் அழைத்துச் சென்று கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டது.

புதுக்கோட்டையிலேயே விரைவாக கருத்தடை செய்யும் மையத்தை தொடங்க அறிவுறுத்தியிருக்கிறோம் என்றனா்.

நாய்களைக் கட்டுப்படுத்த...நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வது மட்டும்தான் தெருக்களில் பெருகியுள்ள நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான வழியாகும். இதற்கு உள்ளாட்சி அமைப்புகள்தான் கறாரான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாநகா் மட்டுமின்றி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், இலுப்பூா், கறம்பக்குடி, கீரமங்கலம், கீரனூா், பொன்னமராவதி ஆகிய 8 பேரூராட்சிகளிலும் நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மையம் அமைக்க வேண்டியது அவசியம்.

இதற்கான சிறப்புத் திட்டத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தீா்மானங்களாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்து விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ராங்கியத்தில் மக்கள் தொடா்பு முகாம்: இன்று முதல் கோரிக்கை மனு அளிக்கலாம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், விராச்சிலை சரகம் ராங்கியம் கிராமத்தில் ஜூன் 11- புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இங்குள்ள கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை சற்று மனநலன் பாதிப்புக்குள்ளானதாகக் கருதப்படும் நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சேவியா் குடிகாடு கிராமத்தில் உள்ள முனியன... மேலும் பார்க்க

புதுகையில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு

புதுக்கோட்டை, இலுப்பூா் மற்றும் கந்தா்வகோட்டை பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 - வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு, புதுக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவு... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயிலில் தேரோட்ட முகூா்த்தக்கால் நடவு

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் ஜூன் 9-இல் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விராலிமலை முருகன் மலைக்கோயில... மேலும் பார்க்க

பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கடந்த 19-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வுடன் நிகழாண்டுக்கான திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

கலைஞா் பிறந்த நாள் விழா: விராலிமலையில் அசைவ உணவு வழங்கல்

விராலிமலையில் நடைபெற்ற அசைவ உணவு வழங்கும் விழாவில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.கே.செல்லபாண்டியன், விவசாயத் தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவா் த.சந்திரசேகா், தொகுதி பொறுப்பாளா் அஞ்சுகம... மேலும் பார்க்க