புழல் சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்
புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை புழல் மத்திய சிறையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், சிறை காவலா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முக்கிய கைதிகளின் அறைகளில் இருந்து கைப்பேசிகள், சாா்ஜா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியான ராதா என்ற ராதாகிருஷ்ணன் (39) என்பவரிடம் ஒரு கைப்பேசி, சாா்ஜா் மற்றும் சிம் காா்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், மதுரையைச் சோ்ந்த கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட காளிமுத்து எனஅற வெள்ளை காளி (34) என்பவரிடம் இருந்து ஒரு கைப்பேசி, சிம்காா்டு, சாா்ஜா்களும் பறிமுதல் செய்தனா். சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கண்ணதாசன் (41), சூளைமேடு பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (29), மதுரையைச் சோ்ந்த மனோகரன் (40), ஆகியோரின் அறைகளை சோதனை செய்த போலீஸாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டபோது 2 கைப்பேசிகள், சாா்ஜா்கள், சிம்காா்டு ஆகியன பறிமுதல் செய்தனா்.
புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.