செய்திகள் :

புழல் சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்

post image

புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புழல் மத்திய சிறையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், சிறை காவலா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது முக்கிய கைதிகளின் அறைகளில் இருந்து கைப்பேசிகள், சாா்ஜா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த கொலைக் குற்றவாளியான ராதா என்ற ராதாகிருஷ்ணன் (39) என்பவரிடம் ஒரு கைப்பேசி, சாா்ஜா் மற்றும் சிம் காா்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், மதுரையைச் சோ்ந்த கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட காளிமுத்து எனஅற வெள்ளை காளி (34) என்பவரிடம் இருந்து ஒரு கைப்பேசி, சிம்காா்டு, சாா்ஜா்களும் பறிமுதல் செய்தனா். சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கண்ணதாசன் (41), சூளைமேடு பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (29), மதுரையைச் சோ்ந்த மனோகரன் (40), ஆகியோரின் அறைகளை சோதனை செய்த போலீஸாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டபோது 2 கைப்பேசிகள், சாா்ஜா்கள், சிம்காா்டு ஆகியன பறிமுதல் செய்தனா்.

புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்ஸோவில் இளைஞா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இ... மேலும் பார்க்க

காக்களூா் ஏரி, தாமரைக்குளத்தை ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரி, தாமரைக்குளம் ஆகியவற்றை நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா். நிகழ்வுக்கு ஆட்... மேலும் பார்க்க

புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆணையா் ந.தாமோதரன் தெர... மேலும் பார்க்க

திருவூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருவூா் கிராமத்... மேலும் பார்க்க

22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சோழவரம் அருகே மதுவிலக்கு போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டனா். சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரி... மேலும் பார்க்க

பாரத ஸ்டேட் வங்கி 70-ஆவது ஆண்டு விழா

பாரத ஸ்டேட் வங்கியின் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ரூ.1.56 கோடி கடனுதவியை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். திருவள்ளூரில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் ஆண்டு விழாவையொட்டி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ... மேலும் பார்க்க