செய்திகள் :

பெட்ரோல் குண்டு வீச்சு, கடும் தாக்குதல்; பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயற்சியா?

post image

பா.ம.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர் ம.க. ஸ்டாலின். இவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவியில் உள்ளார். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.

ம.க. ஸ்டாலின் தம்பி, வழக்கறிஞர் ராஜா, சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அதற்கு பதிலாக, கொலை சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. ம.க. ஸ்டாலின் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆடுதுறை பேரூராட்சி அலுவலகம்

பேரூராட்சி தலைவர் பதவியில் உள்ள ம.க. ஸ்டாலின் ஆடுதுறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இன்று வழக்கம்போல் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கு இருந்துள்ளார். உடன் இளையராஜா, அருண் ஆகியோர் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி ம.க. ஸ்டாலினை கொலை செய்ய முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதாரித்து கொண்ட ம.க.ஸ்டாலின் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதால் இளையராஜா, அருண் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ம.க.ஸ்டாலினை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்று தப்பி சென்ற சம்பவம் அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ம.க.ஸ்டாலின்

தனக்கு பாதுகாப்பு கேட்டு ம.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த கொலை முயற்சியில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள் யார், எதற்காக இதை செய்தார்கள் என்பது குறித்து திருவிடைமருதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஆடுதுறை பகுதி மிகவும் பரப்புடன் காணப்படுகிறது.

மதுரை: `காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமாக செயல்பட்டுள்ளது' - நீதிபதி காட்டம்!

"காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இந்த காவல் நிலையம் ஒரு உதாரணம்" என்று மதுரையிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தை குற்றம்சாட்டி உய... மேலும் பார்க்க

இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை; சிபிஐ விசாரணை கோரி மனு

தன்னிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் புகார் அளித்தும், கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப... மேலும் பார்க்க

'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்துறை; என்ன நடந்தது?

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு சட்டவிரோதமாக பாலினத்தைக் கண்டறிய அனுப்ப... மேலும் பார்க்க

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க