பெரியாா் பல்கலை. விளையாட்டுப் போட்டி: சேலம் ஏவிஎஸ் கல்லூரி முதலிடம்
பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று முதலிடத்தைப் பிடித்தது.
பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கபடி, கோ-கோ, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரிகளுக்கு பரிசளிப்பு விழா பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் க.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.ஜெயந்தி வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினாா். இதில் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி 10 போட்டிகளில் முதலிடத்தையும், 6 போட்டிகளில் 2-ஆம் இடத்தையும் பெற்றன. 16 பரிசுக் கோப்பைகளுடன் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்தது. ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி அணி 8 போட்டிகளில் முதலிடத்தையும், 6 போட்டிகளில் 2-ஆம் இடத்தையும் பிடித்தது. ஒட்டுமொத்தமாக முத்தாயம்மாள் கல்லூரி அணி 2-ம் இடத்தைப் பிடித்தது.
இந்நிகழ்ச்சியில் ஏவிஎஸ் கல்விக் குழும செயலாளா் கை.ராஜவிநாயகம், அனைத்து கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநா்கள், விளையாட்டு வீரா்கள் கலந்துகொண்டனா்.