செய்திகள் :

பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகை: ஆகஸ்ட் இறுதிக்குள் நிறுவ முடிவு

post image

சென்னையிலுள்ள அனைத்து முக்கிய பேருந்து நிறுத்தங்கள், பேருந்து முனையங்களில் இம்மாத இறுதிக்குள் எண்ம அறிவிப்பு பலகை நிறுவப்படும் என மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டு வருகின்றன. சென்னை ஸ்மாா்ட் சிட்டி லிமிட்டெட், பெருநகா் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் ‘இன்டலிஜென்ட் ட்ரான்ஸ்போட் சிஸ்டம்’ என்ற திட்டத்தின் கீழ், இதுவரை 416 பேருந்து நிறுத்தங்களில் எண்ம அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியது:

பேருந்து பயணிகளின் வசதிக்காக கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 416 பேருந்து நிறுத்தங்களில் இந்த எண்ம அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 50 பேருந்து நிறுத்தங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்துக்காக 2600-க்கும் மேற்பட்ட மாநகா் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவியுடன் பேருந்து நிறுத்தங்கள், பேருந்து முனையங்களிலுள்ள எண்ம அறிவிப்பு பலகை நவீன தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள், தங்களுக்கான பேருந்து எந்த இடத்தில் வருகிறது, எத்தனை நிமிஷத்தில் வந்து சேரும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்.

சென்னையிலுள்ள அனைத்து முக்கிய பேருந்து முனையங்கள், பேருந்து நிறுத்தங்களிலும் இந்த எண்ம அறிவிப்பு பலகையை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இத்திட்டம் வெற்றியடைந்தால், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கும் இத்திட்டம் மேம்படுத்தப்படும் என்றனா்.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க