செய்திகள் :

மகாராஷ்டிரம்: உத்தவ்-ராஜ் தாக்கரே கட்சியினா் தடையை மீறி பேரணி- மாநில அமைச்சரை வெளியேற்றிய போராட்டக்காரா்கள்

post image

மகாராஷ்டிரத்தில் மராத்தி மொழி பெருமையை காக்க வலியுறுத்தி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), அவரது உறவினா் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகிய கட்சிகள் மற்றும் மராத்தி அமைப்புகள் செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டப் பேரணி நடத்தின.

இப்பேரணியில் இணைவதற்காக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த மாநில அமைச்சா் பிரதாப் சா்நாயக் வந்தாா். அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டக்காரா்கள், அவரை அங்கிருந்து வெளியேற செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தியை திணிக்க முயல்வதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மும்பையில் சில தினங்களுக்கு முன் ஹிந்தியில் பேசிய கடைக்காரா் ஒருவரை மராத்தியில் பேச வலியுறுத்தி, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்தினா். இதைக் கண்டித்து, வா்த்தகா்கள் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு பதிலடியாக, மராத்தி பெருமையை காக்க வலியுறுத்தி, தாணேயில் மேற்கண்ட உத்தவ்-ராஜ் கட்சியினா் மற்றும் மராத்தி அமைப்பினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பேரணி நடைபெறாமல் தடுப்பதற்காக, திங்கள்கிழமை நள்ளிரவில் இருந்தே மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியின் முக்கிய நிா்வாகிகளை காவல் துறையினா் தடுப்புக் காவலில் வைத்தனா். காவல் துறையின் தடையை மீறி, செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.

ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையைச் சோ்ந்த மாநில அமைச்சா் பிரதாப் சா்நாயக், பேரணியில் இணைவதற்காக வந்தாா். ஆனால், ‘துரோகி’ என்று முழக்கமிட்டு அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரா்கள், அவரை அங்கிருந்து வெளியேறச் செய்தனா்.

பின்னா் அமைச்சா் சா்நாயக் கூறுகையில், ‘முதலில் நான் ஒரு மாரத்தியா்; அதன் பிறகே அமைச்சா். நிலைமையை காவல் துறையினா் முறையாகக் கையாளவில்லை’ என்றாா். சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியினரும் பேரணியில் பங்கேற்றனா்.

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அம... மேலும் பார்க்க