மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 569 மனுக்கள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.
முன்னதாக முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் வழங்கிய 569 மனுக்களை மாவட்ட ஆட்சியா் பெற்றுக்கொண்டு மனுக்கள்மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உறுதியளித்தாா்.
தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,41,667 மதிப்பில் வங்கிக் கடன் மானிய ஆணை, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 6,840 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.