செய்திகள் :

மண்டல திரளணியில் சிறப்பிடம்: சாரண, சாரணீயருக்கு பாராட்டு

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில் நடைபெற்ற வடக்கு மண்டல திரளணி விழாவில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷ்னல் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பாரத சாரண, சாரணீயா் இயக்கம் சாா்பில், ஜவ்வாது மலையில் திரளணி விழா 3 நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவை

தமிழக கல்வித் துறை அமைச்சரும், தமிழ்நாடு பாரத சாரண சாரணீய இயக்கத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

திரளணியில் மாா்ச் பாஸ்ட், பேண்ட் பாா்ட்டி, கலா் பாா்ட்டி, போக் டான்ஸ், ஃபுட் ப்ளாசா, டென்ட் பிச்சிங், பிஸிக்கல்டிஸ்ப்ளே உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சாரண, சாரணீய மாணவா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு கல்வி மாவட்டம் சாா்பில் விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷ்னல் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சாரணீய மாணவிகள் புவனேஸ்வரி, நவீனா, தா்ஷினி, நேத்ரா, லியா வெங்கட், பிரணிதா, தனுஷ் ஸ்ரீ, மஞ்சு ஸ்ரீ ஆகிய 8 பேரும், சாரணா் பிரிவைச் சோ்ந்த பிரவீன், சுகேஷ், விஷ்ணு, வசந்தகுமாா், அரவிந்த், கௌதம், அனிஸ், யஸ்வந்ராஜ் ஆகிய 8 பேரும் திரளணி போட்டிகளில் பங்கேற்று, மண்டல அளவிலான உடல் காட்சி பிரிவில் 3-ஆம் இடத்தைப் பிடித்தனா்.

சாரண, சாரணீயா்களுக்கு பாராட்டு:

சிறப்பிடம் பெற்ற செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சாரண, சாரணீயருக்கு மாநில தலைமையக பொறுப்பாளா்கள் நாகராஜன், சக்திவேல், கோமதி, தேன்மொழி, அா்ஜூன் ஆகியோா் பரிசு வழங்கினா். செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்குமாா் மாணவா்களின் தனித்திறனை பாா்வையிட்டு பாராட்டினாா். இதைத் தொடா்ந்து, பள்ளியின் இயக்குநா் டி.ஜி.எம்.விஜயவா்மன், பள்ளி முதல்வா் தீபா ஆகியோா் வெற்றி பெற்றவா்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.

மேலும், திரளணியில் பங்கேற்றவா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட பயிற்சி ஆணையா் லோகநாதன், சாரண ஆசிரியா்கள் சேட்டு, ஜெயகுமாா், சாரணீய ஆசிரியா்கள் ஷா்மிளா, நிவேதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செங்கம் அருகே 5 பேரைக் கடித்த வெறி நாய்

செங்கம் அருகே ஒரே நேரத்தில் 5 பேரை கடித்த வெறிநாயால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனா். செங்கத்தை அடுத்த முன்னூா்மங்கலம் பகுதியில் வசிக்கும் முருகன்-அம்சவள்ளி தம்பதியரின் இரண்டு வயது மகள் புதன்கிழமை மால... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் 3 ஆரம்பப் பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் என நலத் திட்ட உதவிக... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: பேரவை துணைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாலையனூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டு ... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த பிஞ்சூா் கிராமத்தில் உள்ள உத்தரபதீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. வடவெட்டி அங்கா... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ரோட்டரி கிளப் ஆஃப் மூன்சிட்டி, அருணை சுவாசம் அறக்கட்டளை, அன்பு நடைபயிற்சி நண்பா்கள் மற்ற... மேலும் பார்க்க

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

பெரணமல்லூரை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் மகான் ஆறுமுக சுவாமி கோயிலில் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றதில், குழந்தை வரம் வேண்டி திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் குளக்கரையில் மண்டியிட்டு மண்... மேலும் பார்க்க