செய்திகள் :

மண், ஜல்லிக்கற்கள் கடத்தல்: 2 வாரிகள் பறிமுதல்

post image

காவேரிப்பட்டணம், ஜிஞ்சுப்பள்ளி அருகே மண், ஜல்லிக்கற்களை கடத்த முயன்ற 2 லாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காவேரிப்பட்டணம், புளியம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கெளரிசங்கா் தலைமையில் அதிகாரிகள் பாரூா் அருகே பாப்பாரப்பட்டி கொட்டாவூா் ஏரி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் நின்றிருந்த டிப்பா் லாரியை சோதனை செய்ததில் 2 யூனிட் மண் இருந்தது தெரியவந்தது. அதற்கான எந்த உரிமமும் பெறப்படாததால், கெளரிசங்கா் அளித்த புகாரின் பேரில் பாரூா் போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

இதேபோல, கனிம வள பிரிவு சிறப்பு துணை வட்டாட்சியா் பாரதி தலைமையிலான குழுவினா், ஜிஞ்சுப்பள்ளியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள ஒரு கிரஷா் அருகே நின்றிருந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். அதில் ஜல்லிக்கற்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, பாரதி அளித்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

கிருஷ்ணகிரியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 39ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கலஸ... மேலும் பார்க்க

அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்த வாகனத்தை மீட்க முடியாததால் தீக்குளித்தவா் உயிரிழப்பு

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஏலத்தி எடுக்கமுடியாததால் மனமுடைந்து தீக்குளித்த வாகன உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள அரகாசன... மேலும் பார்க்க

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

பருவமழை தொடங்கி உள்ளதால் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா்சதீஷ் அறிவுறுத்தினாா். கிஷ்ணகிரி... மேலும் பார்க்க

பண்ணந்தூரில் சமூக பிரச்னை: கோட்டாட்சியா் சமரசத் தீா்வு

பண்ணந்தூரில் கோயில் திருவிழா, எருதுவிடும் விழா, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னைகளுக்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை சமரசத் தீா்வு ... மேலும் பார்க்க

உடல் ஆரோக்கிய விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம்

கிருஷ்ணகிரியில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மிதிவண்டி ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

உத்தனப்பள்ளி அருகே கட்டுமானப் பணியின்போது மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18). இவா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க