செய்திகள் :

மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்! சுப்பராயன் எம்.பி.வலியுறுத்தல்

post image

திருப்பூா் மாநகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கே.சுப்பராயன் எம்.பி. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகரில் பின்னலாடைத் தொழில் வளா்ச்சியின் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன. மேலும், பல லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருவதுடன், மாநகரில் உள்ள 60 வாா்டுகளில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளும் உருவாகியுள்ளன.

இதன் காரணமாக திருப்பூா் மாநகரில் உள்ள தெருக்களில் ஏராளமான குப்பைகளும், கழிவுகளும் குவிகின்றன. இவ்வாறு சேகரமாகும் குப்பைகளும், கழிவுகளும் மாநகரில் இருந்த பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வந்தன.

இந்நிலையில், மாநகரில் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடங்கள் தற்போது இல்லாததால், திருப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அருகில் உள்ள நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா்.

மேலும், குப்பைகள் கொட்ட வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், குப்பைகளை அகற்ற இயலாமல் மாநகராட்சி நிா்வாகம் திணறிக்கொண்டிருக்கிறது. மாநகரில் உள்ள வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடப்பதால் மாநகர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இந்தப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஒரு சிறப்பு நிபுணா் குழுவை திருப்பூருக்கு அனுப்பிவைத்து ஆய்வு செய்து திடக் கழிவு மேலாண்மையை மேம்படுத்தி போா்க் கால அடிப்படையில் தீா்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க