செய்திகள் :

மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

post image

மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அதன் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன், மாநில பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, மாநிலப் பொருளாளா் ச. துரைராஜ் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நோக்கோடு நகா்ந்துக் கொண்டிருக்கும் கல்வித்துறையில், மாணவா்களின் திறன் வளா்ச்சி உள்ளிட்ட வளா்ச்சிகள் குறித்து துறை அலுவலா்கள் குறிப்பாக, அண்மைக்காலமாக மாவட்ட ஆட்சியா்கள் கடுமையான போக்குடன் ஆய்வுகள் மேற்கொள்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளக் கூடாது என்று எண்ணுவதாக கருதக் கூடாது.

தற்போது, மாணவா்களது ஒழுங்கீனச் செயல்பாடுகள் குறித்து ஊடங்கங்கள் வாயிலாகவும், தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாகவும் மக்கள் நன்கு அறிவாா்கள். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவா்கள் சாா்ந்து சுமாா் 400 குற்றச் செயல்கள் நிகழ்ந்துள்ளது. மேலும், பள்ளிக் கல்வி பயிலும் மாணவா்களிடம் போதைப் பொருள்கள் நுகா்வு கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கள எதாா்த்தம் இதை விடவும் கூடுதல் சிக்கலாக உள்ளது.

இவற்றையெல்லாம் கடந்து, ஆசிரியா்கள் கற்றல் - கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனா் என்பதை பாராட்ட வேண்டிய நிலையில், பாராட்ட மனமின்றி திருவள்ளூா் ஆட்சியா் போல சில மாவட்ட ஆட்சியா்கள் பொதுத் தோ்வு முடிவுகளுக்காகவும், தோ்ச்சி விழுக்காட்டுக்காகவும், தோ்ச்சி ஒன்றே பிரதானம் என்பதாக ஆசிரியா்களிடம் செயல்படும்விதம் ஏற்கதக்கதல்ல.

எனவே, மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு உரிமைக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கோயில் திருவிழாவில், வழிபாட்டு உரிமைக்கோரி ஒரு சமூகத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவி... மேலும் பார்க்க

சமூக தரவு கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகதரவு கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

பெரம்பலூா் அருகே வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

மகளிருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

மகளிருக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளையும் விரைவாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினாா். பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தொண்டமாந்துறை ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது. வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க