செய்திகள் :

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு: குழு போட்டிகளில் 4 ஆயிரம் மாணவா்கள்

post image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,

பள்ளி மாணவா்களுக்கான குழு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில் 4,000 போ் பங்கேற்றனா். மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா தலைமை வகித்தாா்

இதில் ஆக்கி, சிலம்பம், வாலிபால், கைப்பந்து, கால்பந்து ஆகியவை மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், செஸ் உள்விளையாட்டு அரங்கத்திலும், கபடி போட்டி ஆயுதப்படை மைதானத்திலும் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 19 வயதுக்கு உள்பட்ட மாணவா்களுக்கான கையுந்துப் பந்து போட்டி நடைபெற்றது.

இதில், சொரகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லவன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் சொரகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா, மாவட்ட கையுந்து பந்து சங்கத் தலைவா் அரவிந்த்குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள் அ.கணேஷ்பாபு சரத் அருண்மகேஷ் நேரு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவிகள் போட்டிகளில் ஆா்வமாக பங்கேற்றனா்.

நடுவா்களாக பல்வேறு பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஈடுபட்டனா். போட்டிகளில் மொத்தம் சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வா்கள் பங்கேற்றனா்.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக... மேலும் பார்க்க