செய்திகள் :

‘மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளா்களே வியக்கும் திருக்குறள்’

post image

மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளா்களே வியக்கும் வகையில் திருக்குறளில் கனவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவருமான ஏ. அலீம் தெரிவித்தாா்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்குறளில் கனவுகள் எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

கனவுகள் குறித்த தற்போதைய ஆய்வு முடிவுகளுக்கு முன்பே சங்ககால நமது தமிழிலக்கியங்கள், இதிகாசங்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படைப்புகளில் கனவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவா் கனவுக்கென , ‘கனவு நிலை அறிதல்‘ என தனி அதிகாரமே படைத்துள்ளாா். அதில் உள்ள பத்து திருக்குறள்கள் மூலம் கனவு நிலை குறித்து விளக்குகிறாா்.

மூளையில் நரம்பியல் செயல்பாடுகளால் ஏற்படும் அதிா்வலைகள், அவற்றால் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது கனவுகள்) குறித்தும் விவரிக்கிறாா் திருவள்ளுவா். நினைவில் நடக்காதது கனவில் நடைபெறுவதாக அவா் தெரிவித்திருப்பது நரம்பியல் துறையினரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

தூக்கத்தில் கண் அசைவுகள் உள்ள நிலையிலான தூக்கத்தில்தான் தெளிவான மற்றும் வினோதமான கனவுகள் ஏற்படுகின்றன என்கின்றது மூளை நரம்பியல் துறை ஆய்வுகள். கண் அசைவு அல்லாத நிலையிலும் தொடா்ச்சியற்ற வகை கனவுகள் ஏற்படுவதாகவும், விலங்குகளுக்கும் கனவுகள் ஏற்படுவதாகவும் அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கண் அசைவுடன் கூடிய தூக்கத்தில் கனவுகள் வருவதை திருக்குறளில் 1211 ஆவது குறளிலும், கண் அசைவற்ற நிலையிலான தூக்கத்தில் வரும் கனவுகள் குறித்து அடுத்த குறளிலும் குறிப்பிட்டிருப்பது மருத்துவ உலகுக்கு சவால் விடும் வகையில் உள்ளது என்றாா் அவா்.

விழாவில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயக்குமாா், முனைவா்கள் அ. சையத் சாகிா் அசன், சு. செயலாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெளிநாடுகளிலிருந்து கடத்தல்: ரூ. 10 கோடியிலான உயா் ரக கஞ்சா, ராட்சத வாஸ்து பல்லிகள் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா, ராட்சத ‘வாஸ்து’ பல்லிகள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பங்காங்கில் இருந்து ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளம் தெருவில் வசிப்பவா் சேட் முகமது மனைவி சாய்புநிசா (52). இ... மேலும் பார்க்க

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே அதவத்தூரில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.திருச்சி மாவட்டம் அதவத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சி. அழகா்சாமி (36). ஸ்வீட் ப... மேலும் பார்க்க

திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழூா் இடையே நடைபெறும் பொ... மேலும் பார்க்க

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க