செய்திகள் :

மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இருக்க மாட்டார்கள்: மமதா பானர்ஜி

post image

மேற்கு வங்கத்தில் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட இல்லாத சூழலை பாஜக எதிர்கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி விதி 169-கீழ் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதனால் கடும் அமளி நிலவியது. இதனைத் தொடர்ந்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அமளியின்போது ஆளும் கட்சியினர் தண்ணீர் பாட்டிலை வீசியதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் சட்டப்பேரவையில் முதல்வர் மமதா பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், “பாஜக தவிர்க்க முடியாத தோல்வியைச் சந்திக்கும். வங்காள மக்களுக்கு எதிராக மொழியியல் பயங்கரவாதத்தை நடத்தும் எந்தக் கட்சியும் மேற்கு வங்கத்தில் வெற்றிபெற முடியாது.

பாஜக ஒரு வாக்குத் திருட்டுக் கட்சி, அதன் மையத்திலே ஊழல் நிறைந்துள்ளது. வங்காள மக்களை துன்புறுத்திவதிலும் ஏமாற்றுவதிலும் வல்லமைப் பெற்றதாகவுள்ளது.

வங்காள மக்களை துன்புறுத்தும் பாஜகவை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மேற்கு வங்கத்தில் ஒரு பாஜக எம்எல்ஏகூட இல்லாத சூழல் விரைவில் வரும். மக்களே அதை உறுதி செய்வார்கள்” என்றார்.

வெளி மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாம், ஒடிஸா, மகாராஷ்டிரம், தில்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

West Bengal Chief Minister Mamata Banerjee has said that the BJP will face a situation in West Bengal where there is not even a single MLA from their party.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்.ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆண்டோனியா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேய... மேலும் பார்க்க

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவின் நல்லுறவு பாதிக்கப்படுவதாக அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் அமெரிக்கா - இந்தியா கூட்டமைப்பின் இணைத் தல... மேலும் பார்க்க

சுதேசி பொருள்களைப் பயன்படுத்த மாணவர்களுக்கு ஊக்கம்- பிரதமர் மோடி வலியுறுத்தல்

சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்க மாணவர்களை ஆசிரியர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் நர... மேலும் பார்க்க

காங்கிரஸை போல் நான் செய்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள்! மோடி

காங்கிரஸை போல் வரி விதித்திருந்தால் என் தலை முடியைப் பிடிங்கியிருப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.தில்லியில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர... மேலும் பார்க்க

உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி - டிரம்ப் பதில்!

உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்ட... மேலும் பார்க்க

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளியைத் தொடர்ந்து 5 பாஜக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், கடந்த செவ்... மேலும் பார்க்க