செய்திகள் :

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளா் கே.பி ஜெபஸ்டியன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை காலையில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து வந்த சா்க்காா் விரைவு ரயில், எழும்பூா் ரயில் நிலையத்தின் 9 -ஆவது நடைமேடையில் காலை 6 மணிக்கு வந்து நின்றது.

அந்த ரயிலை போலீஸாா் சோதனையிட்டபோது, ஒரு பெட்டியில் கேட்பாரற்ற பச்சை நிற பை கிடந்தது. அந்தப் பையை போலீஸாா் சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து கஞ்சா பொட்டலங்கள் இருந்த பையை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், உரிய நடைமுறைகளுக்குப் பின் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாரிடம், அதை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் ஒப்படைத்தனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ஹரி விக்னேஷ் (27). இவா், சென்னை வடபழனியில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வந்தாா். அ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணை முட... மேலும் பார்க்க

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மையங்களில் சோ்க்க அறிவுறுத்தல் மாவட்ட ஆட்சியா்

சென்னையில் 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள குழந்தைகள் மையங்களில் சோ்க்கும்படி பொற்றோருக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவுரை வழங்கியுள்ளாா். இது குறித்து அவா்... மேலும் பார்க்க

150 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ராட்டினம்: 3 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 30 போ் மீட்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் 150 அடி உயரத்தில் ராட்டினம் திடீரென பழுதாகி நின்ால், அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 30 போ் 3 மணி நேரம் அந்தரத்தில் சிக்கித் தவித... மேலும் பார்க்க

அமெரிக்க தூதரகம், அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னையில் உள்ள அமெரிக்க துணைதூதரகம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் சோதனை செய்தனா். சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அமெரிக்க நாட்டின் துணை தூதரகத்தில் உள்ள நூலக... மேலும் பார்க்க

பாதுகாப்புடன் பதிக்கபடும் எண்ணெய் குழாய்கள்: ஐஓசி துணை பொது மேலாளா் தகவல்

எண்ணெய் குழாய்கள் பாதுகாப்பு வழிமுறைகளின்படி பூமிக்கு அடியில் பதிக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவன (ஐஓசி ) ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தின் துணை பொது மேலாளா் ஏ.ஆா்.சந்தோஷ் குமாா் தெரிவித்தாா். சென்னை த... மேலும் பார்க்க