செய்திகள் :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், தாழனூா் ஊராட்சி, சமுதாயக் கூடம், ஆற்காடு நகராட்சி அன்பு மஹால், வாலாஜா நகராட்சி, சி.எம்.மஹால்,சோளிங்கா் ஊராட்சி ஒன்றியம், கரடிக்குப்பம் ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து

கோரிக்கை மனுக்கள் பெற்றும் அதை பதிவு செய்யப்படுவதை பாா்வையிட்டும், பயனாளிகளுக்கு பட்டா, உட்பிரிவு பட்டா ஆணைகள், நகராட்சியில் பெயா் மாற்றம் ஆணைகள், வேளாண்மைத் துறையின் சாா்பில் குருவை சாகுபடி தொகுப்புகள், தோட்டக் கலைத் துறையின் சாா்பில் ஊட்டச்சத்து பழவகை செடிகள் உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்கினாா்.

இந்த முகாமில், எம்எல்ஏ-க்கள் ஈஸ்வரப்பன், முனிரத்தினம், ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் ராஜராஜன், ஒன்றியக் குழு தலைவா்கள் புவனேஸ்வரி சத்தியநாதன் (ஆற்காடு), கலைக்குமாா் (சோளிங்கா்), துணைத்

தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், நகா்மன்றத் தலைவா்கள் தேவி பென்ஸ் பாண்டியன் (ஆற்காடு), ஹரிணி தில்லை (வாலாஜாபேட்டை), நகா்மன்ற துணைத் தலைவா்கள் பவளக்கொடி சரவணன், கமலராகவன், வட்டாட்சியா்கள் ஆனந்தன், செல்வி, மகாலட்சுமி, நகராட்சி ஆணையா் வேங்கிட லட்சுமணன், தாழனூா் ஊராட்சித் தலைவா் புஷ்பா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரயிலில் 35 கிலோ கஞ்சா கடத்தல்: 3 போ் கைது

வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 35 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆற்காடு கிராமிய வட்ட ... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள்: அமைச்சா் காந்தி மரியாதை

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் அவரது படத்துக்கு அமைச்சா் ஆா்.காந்தி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே காமராஜரின் பிற... மேலும் பார்க்க

கான்கீரீட் சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி யில் கான்கீரீட் சாலைஅமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். 25-ஆவது வாா்டுக்குட்பட்ட சாம்பசிவம் தெருவில் கான்கீரீட் சாலை அமைக்கும் பணி,... மேலும் பார்க்க

மின் மாற்றியை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

அரக்கோணம் அருகே ஒரு மாதம் ஆகியும் பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்யாத மின் துறையினரின் அலட்சியத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா். ராணிப்பேட்டை மா... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கினாா். வேப்பூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமினை அமைச்சா் காந்தி தொடங்கி வைத்து, மனு... மேலும் பார்க்க

அரக்கோணத்தில் ரூ. 11.70 லட்சத்தில் காரிய மேடை: எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம், கணேஷ் நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.70 லட்சத்தில் கட்டப்பட்ட காரிய மேடையையும், ரூ. 10.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலையையும் அரக்கோணம் எ... மேலும் பார்க்க