செய்திகள் :

ராமஜெயம் கொலை வழக்கு: புழல் சிறையில் ரெளடியிடம் சிபிசிஐடி டிஐஜி விசாரணை

post image

திருச்சியில் தமிழக அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக, புழல் சிறையில் இருக்கும் ரெளடியிடம் சிபிசிஐடி டிஐஜி வி.வருண்குமாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினாா்.

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரரும் திருச்சியைச் சோ்ந்த தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 ஆண்டு கொலை செய்யப்பட்டாா். கொலை நிகழ்ந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் துப்பு துலங்காத நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்குத் தொடா்பாக டிஐஜி வி.வருண்குமாா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரெளடி சுடலைமுத்துவிடம் விசாரணை செய்தாா்.

இந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு, ராமஜெயம் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் திருச்சி சரகத்தில் இருந்த டிஐஜி வருண்குமாா், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாா். இதைத் தொடா்ந்து டிஐஜி வருண்குமாா் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாா், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதி திருச்சி மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த ரெளடி குணா என்ற குணசீலன் (44) என்பவரிடம் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

சந்தேகப்பட்டியலில் ரெளடி குணா: ராமஜெயம் கொலை வழக்கில் ரெளடி குணசீலன் என்ற குணா ஏற்கெனவே காவல் துறையின் சந்தேகப்பட்டியலில் இருந்து வந்தாா். திருச்சி மணிகண்டம் பகுதியில் கடந்த 2004-இல் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019-இல் நீதிமன்றம், குணசீலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இந்த தண்டனையை முதலில் திருச்சி மத்திய சிறையில் அனுபவித்து வந்த குணசீலன், கடந்த 2021-இல் புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா். அவா் மீது 5 கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீடு புகுந்து திருட்டு: மேலும் ஒருவா் கைது

சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். மதுரவாயல் பாக்கியலட்சுமி நகா், எம்ஜிஆா் தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (50). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒ... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல் : ரெளடி கைது

சென்னை ஓட்டேரியில் காவலரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா். சென்னை ஓட்டேரி காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செ.குருசாமி. இவா், ஓட்டேரி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிகிறாா். குருசாம... மேலும் பார்க்க

ரிப்பன் மாளிகையில் தொடரும் போலீஸ் பாதுகாப்பு

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்ய... மேலும் பார்க்க

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய ... மேலும் பார்க்க

பிறவிக் குறைபாடு: 5 வயது குழந்தைக்கு தலை ஓடு சீரமைப்பு

பிறவிக் குறைபாடு காரணமாக சீரற்ற தலை அமைப்பை கொண்டிருந்த 5 வயது குழந்தைக்கு மிக நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க ஒப்புதல்

தமிழகத்தில் 5 மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவ கட்டமைப்புகளை ரூ.17.50 கோடியில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை: கிரு... மேலும் பார்க்க