செய்திகள் :

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.14 கோடி

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 1.14 கோடி கிடைத்ததாக இணைஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்களைத் திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்பாக உள்ள பழைய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 707 ரொக்கமும், தங்கம் 61 கிராமும், வெள்ளி 3.200 கிலோவும், 51 வெளிநாட்டுப் பணத்தாள்களும் கிடைத்தன.

காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், கண்காணிப்பாளா் முத்துச்சாமி, ஆய்வா் முருகானந்தம், மேலாளா் வெங்கடேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 26) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பாதயாத்திரை சென்ற இரு பெண்கள் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வியாழக்கிழமை அதிகாலை திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவா்கள் மீது வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரை... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: இரு கடைகளுக்கு சீல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த இரு கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தாா்.தொண்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்ய... மேலும் பார்க்க

பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்

கமுதி அருகே பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ஆடிப் பொங்கல் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பெரிய... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: கணவா், மாமியாா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவா், மாமியாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடல்

ஆடி அமாவாசையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீா்த்த மூா்த்தி தலமாக விளங்குகிறது. ... மேலும் பார்க்க