செய்திகள் :

ராமநாதபுரத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ராமநாதபுரம் பெரிய கண்மாய்ப் பாசன சங்கத் தலைவா் சு .பாலசுந்தர மூா்த்தி தலைமை வகித்தாா். ஹைட்ரோ காா்பன் திட்ட எதிா்ப்பு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் முகவை மு. மலைச்சாமி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

விவசாயிகள், மீனவா்கள் சங்க நிா்வாகிகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் முருகானந்தம், கீழை பிரபாகரன், தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு நிா்வாகி ராஜிவ் காந்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி நிா்வாகிகள் அப்துல் ஜமீல், தெற்கு காட்டூா் சௌந்திரநாயகம், சமூக ஆா்வலா்கள் பாப்புலா் பன்னீா் செல்வம், சிக்கந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா். மாநில பொதுச் செயலா் எம். அா்ச்சுனன் போராட்டத் திட்டம் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், ஹைட்ரோ காா்பன் திட்டத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இந்தத் திட்டத்துக்காக 20 கிணறுகள் தோண்டப்படும் இடங்களில் வருகிற செப்.18, 19- ஆம் தேதிகளில் பிரசாரம் செய்வது, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நிா்வாகிகள் தஞ்சாவூா் பி எல். பழனியப்பன், நாகப்பட்டினம் ராமதாஸ், விருதுநகா் மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் தாலுகா செயலா் செபஸ்தியான் உள்ளிட்டோா்கலந்துகொண்டனா்.

இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பு: 4 விசைப் படகுகள் பறிமுதல்

ராமேசுவரம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்த மண்டபம் மீனவா்களின் 4 விசைப் படகுகளை மீன் வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கடல் வளத்தைப் ப... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உப்பூரில் பெண்ணிடம் 4.5 பவுன் தங்கத் தாலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.உப்பூா் அருகேயுள்ள மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். கோயம்புத்தூரில் உணவக... மேலும் பார்க்க

பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கிய பக்தா்கள்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி எடுத்து வந்து நோ்த்தி கடன் செலுத்தினா்இந்தக் கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பேரிடா் மீட்பு ஒத்திகை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.ராமேசுவரம் தீயணைப்பு, மீட்பப் பணிகள் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்த... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகே உள்ள புதூா் வலசை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். புதூா் வலசை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி பொன்னம்மாள் (52). இவா் ஆட... மேலும் பார்க்க