செய்திகள் :

ராமேசுவரத்தில் புதைச் சாக்கடை திட்டம்: துணை முதல்வா் காணொலி காட்சி மூலமாக திறந்துவைப்பு

post image

ராமேசுவரம் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ், ரூ. 52.60 கோடியில் புதைச் சாக்கடை திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ராமேசுவரம் நகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கிழ், கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ.52.60 கோடியில் புதைச் சாக்கடை திட்டம் பணிகள் தொடங்கியது. தற்போது, இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலமாக இந்தப் பணிகளை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, ராமேசுவரம் ஓலைக்குடா கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை விகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளா் சற்குணநாதன், நகா்மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான், துணைத் தலைவா் தெட்சணாமூா்த்தி, ஆணையா் (பொ)அஜிதாபா்வின், பொறியாளா் பாண்டீஸ்வரி, வட்டாட்சியா் அப்துல் ஜாப்பாா், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் மயில்வாகனம் கூறியதாவது:

ராமேசுவரம் நகராட்சி பகுதி இரண்டு கழிவுநீா் சேகரிப்பு மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. 587 இயந்திரக் குழிகளிலிருந்து பெறப்படும் கழிவுநீா் ஓலைக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படவுள்ளது.

பின்னா், இந்த கழிவுநீா் அருகிலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் மரங்கள் வளா்ப்பதற்கு வழங்க திட்டமிடப்பட்டது. 21 வாா்டுகளை கொண்ட ராமேசுவரம் நகராட்சியில் முதல் கட்டமாக 13 வாா்டுகள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

வயலில் வைக்கப்பட்ட விஷத்தை உள்கொண்ட 4 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே பருத்தி வயலில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை உள்கொண்ட 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்த சாரங்க பாண்டியன் மனைவி மகேஸ்வரி (58). இவ... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளி கல... மேலும் பார்க்க

பாம்பனில் கடல் சீற்றம் 5 மீனவா்களுடன் கடலில் கவிழ்ந்தது படகு

பாம்பனில் கடல் சீற்றம் காரணமாக, 5 மீனவா்களுடன் விசைப் படகு வெள்ளிக்கிழமை கடலில் கவிழ்ந்தது. எனினும், அந்த மீனவா்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்த அந... மேலும் பார்க்க