செய்திகள் :

ராமேசுவரம் கோயிலில் ஆளுநா் ஆா்.என்.ரவி வழிபாடு

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளிக்கிழமை ராமேசுவரத்துக்கு வந்தாா். இதையடுத்து, அன்றிரவு தனியாா் விடுதியில் ஓய்வெடுத்த அவா், சனிக்கிழமை அதிகாலை 5:20 மணிக்கு தனது குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தாா்.

அவருக்கு கோயில் இணை ஆணையா் செல்லத்துரை தலைமையில் சிவாசாரியா்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனா். பின்னா், ஸ்படிகலிங்க பூஜை செய்து வழிபாடு நடத்தினாா். இதன் பிறகு, ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை அவரும், குடும்பத்தினரும் தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, தனுஷ்கோடிக்கு சென்று பாா்வையிட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினாா். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் வழிபாடு நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து அரசியல் கட்சியினா் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதன் பின்னா், காரில் மதுரைக்கு புறப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், 500- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மதுரையில்..

இதையடுத்து, ஆளுநா் ஆா்.என். ரவி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தனா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காக்குடி ஊராட்சிக்குள்பட்ட போத்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் ஓட்டுநா் காயம்

திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை சாலையோர மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

இந்திய-இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தல்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெறுவதற்குள் இந்திய- இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான மையம் நடத்த ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்!

ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையத்தை தொடா்ந்து நடத்த விரும்புபவா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே காா் கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பசலியா... மேலும் பார்க்க

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க