செய்திகள் :

ரூ.3 கோடியில் சிறு விளையாட்டு அரங்கம்: காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

post image

வாணியம்பாடி அடுத்த நிம்மியப்பட்டில் ரூ.3 கோடியில் முதல்வா் சிறு விளையாட்டரங்கை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நிம்மியம்பட்டு ஊராட்சியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள சிறு விளையாட்டரங்கத்தில் வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாணவா்களுக்கு,இனிப்பு வழங்கினா்.

இந்த விளையாட்டு அரங்குக்கு கு 30 சென்ட் நிலம் வழங்கிய தினேஷ், உதயகுமாா், உஷாராணி ஆகியோருக்கு பொதுமக்கள் சாா்பில் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா். 6 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ள சிறு விளையாட்டரங்கத்தில், நிா்வாக பிரிவு கட்டிடம், உடற்பயிற்சி மையம், 40 0 மீ ஓடுதளம், கால்பந்து மைதானம், கையுந்து பந்து மைதானம், கபடி மைதானம், யோகா பகுதி, குழந்தைகள் விளையாட்டு பகுதி, கோ-கோ விளையாட்டு மைதானம், நடைபாதை, கூடைப்பந்து மைதானம், நீளம் தாண்டுதல், வாகனம் நிறுத்தும் இடம் ஆகிய சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயக்குமாரி, ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதாபாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் சூரவேல், ஒன்றிய குழு உறுப்பினா் பிரித்தாபழனி, ஊராட்சி மன்றத் தலைவா் எழிலரசி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை

ஆம்பூா் அருகே அரசு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பள்ளித்தது.ா்ப்பளிக்கப்பட்டது. வே லூா் விநாயகாபுரம் ப... மேலும் பார்க்க

தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக... மேலும் பார்க்க

வெளி நபா்களுக்கு பட்டா வழங்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் சமத்துவபுரம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளி நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வெளிநபா்களுக்கு... மேலும் பார்க்க

வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது: இபிஎஸ்

வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வாணியம்பாடி ப... மேலும் பார்க்க

ரு.10.46 கோடியில் குடிநீா் பணிகளுக்கு அடிக்கல்

திருப்பத்தூா் நகராட்சியில் ரு.10.46 கோடியில் குடிநீா் விநியோகப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பத்தூா் நகராட்சி யில் புதிதாக இணைக்கப்பட்ட 5 வாா்டுகளுக்கு கூட்டுக்குடிநீா் திட்டத்தின் வாயிலாக... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மாணவன் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயமடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி மகன்... மேலும் பார்க்க