செய்திகள் :

விஷப்பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் அதிர்ச்சி!

post image

வேலூர், விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முடிதிருத்தும் சலூன் தொழிலாளி ரமேஷ். இவரின் 13 வயது மகன் சஞ்சய், வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று இரவு 8 மணியளவில், விருப்பாட்சிபுரம் பூந்தோட்டம் அருகேயுள்ள புதர் பகுதியில் அருகம்புல் தேடி சிறுவன் சஞ்சய் சென்றிருக்கிறான். அப்போது, ஏதோவொரு விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், காலில் வலி ஏற்பட்டு சிறுவன் துடித்திருக்கிறான்.

மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு

பெற்றோர் சிறுவனை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை சிறுவன் சஞ்சய் உயிரிழந்துவிட்டான். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாகாயம் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுவன் என்ன வகை விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தான்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரிவு பகுதியில் அத்துமீறி வுட் ஹவுஸ் கட்டிய ஆந்திரா க்ரூப்; அதிரடி காட்டிய அதிகாரிகள்- பின்னணி என்ன?

இந்தியாவின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுலாவின் பெயரால் பல்வேறு விதிமீறல்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்ப... மேலும் பார்க்க

கனிம வளக் கொள்ளையை தட்டிக் கேட்டவர் கொலை: தேனியில் பரபரப்பு!

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்குமார் என்ற சசி ( 40), கம்பத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூர... மேலும் பார்க்க

காதலனை நள்ளிரவில் கணவன் வீட்டிற்கு அழைத்த இளம்பெண்; தந்தை செய்த பயங்கரம்- மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் உள்ள போர்ஜுனி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவானி. இவருக்கு கடந்த ஆண்டு அருகில் உள்ள கோலேகாவ் என்ற கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் திருமணமானது. திருமணத்... மேலும் பார்க்க

``நீ இல்லை என்றால்'' - காதலன் கண்முன்னே உயிரை மாய்த்த காதலி; சென்னை ராயபுரத்தில் சோகம்

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சிதா(24). இவர் கல்லூரியில் படிக்குபோதே வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் (26) என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டார... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜில் நடந்த கொடூரம்

திருமணம் மீறிய உறவுகர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கெராசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரக்‌ஷிதா. இவர் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால் தனது உறவினரான சித்தராஜு என்பவரையும் காதலித்து வந்தார். ரக... மேலும் பார்க்க

``இன்ஸ்டா ரீல்ஸ், பியூட்டி பார்லர் வேண்டாம் என்றேன்'' - பெண்ணை உயிரோடு எரித்த கணவர் வாக்குமூலம்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி (28) என்ற குடும்ப பெண்ணை அவரது கணவரும், குடும்பத்தினரும் சேர்ந்து ரூ.36 லட்சம் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து உயிரோடு தீவைத்து எர... மேலும் பார்க்க