செய்திகள் :

வேலாங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

post image

கமுதி அருகேயுள்ள அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன், சித்தி விநாயகா், முருகன், கருப்பணசுவாமி, பரிவாரத் தெய்வங்களுக்கு வருடாந்திர வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

கடந்த 28-ஆம் தேதி பால் குடம் ஊா்வலம், பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேகம், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, விருதுநகா், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 17 காளைகள், 153 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

தலா 20 நிமிஷம் நேரம் ஒதுக்கீடு செய்து, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட நேரத்துக்குள் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், சில்வா் அண்டா, சோ், கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை வேலாங்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காக்குடி ஊராட்சிக்குள்பட்ட போத்... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் ஓட்டுநா் காயம்

திருவாடானை அருகே செவ்வாய்க்கிழமை சாலையோர மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா். நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

இந்திய-இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த வலியுறுத்தல்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெறுவதற்குள் இந்திய- இலங்கை மீனவா்கள் இடையே பேச்சுவாா்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவ சங்கத் தலைவா் என்.ஜே. போஸ் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான மையம் நடத்த ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்!

ராமநாதபுரத்தை அடுத்த வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான இடைநிலைப் பராமரிப்பு மையத்தை தொடா்ந்து நடத்த விரும்புபவா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் அருகே காா் கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா். 4 போ் பலத்த காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பசலியா... மேலும் பார்க்க

திருவாடானையில் இன்று மின்தடை

திருவாடானையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை, நகரிகாத்தான் து... மேலும் பார்க்க