செய்திகள் :

அமெரிக்க வரி: 3 ஆயிரம் கோடி வா்த்தகம் பாதிப்பு: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

post image

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழக பின்னலாடை ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், இந்த பாதிப்புகளைச் சீா்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் மோடியை வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதன்காரணமாக அமெரிக்காவில் இந்திய பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு 50 சதவீதமாக உயா்ந்துள்ளது.

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு, வாகன உதிரி பாகங்கள், ஆபரணங்கள், மின்னணு சாதனங்கள், தோல் பொருள்கள் மற்றும் சேவைத் துறை போன்றவற்றுடன் ஜவுளித் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அத் துறையினரிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, ஜவுளித் துறையினருக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவிலிருந்து சுமாா் 1,100 கோடி டாலா் மதிப்பிலான ஜவுளி, ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. இது இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 30 சதவீதமாகும். அதிலும், தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சுமாா் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதேபோல, இந்தியாவின் ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்கள் 21 சதவீதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. நாட்டின் தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்போதைய கூடுதல் வரிவிதிப்பு காரணமாக தமிழகத்தின் தோல் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி, தோல் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட தொழில் துறைகளைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அத் துறையைச் சாா்ந்த தொழில்முனைவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதேபோல, பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் தொழில் துறையைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீா்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு, தமிழ்நாட்டின் பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வா்த்தகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி வா்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பையும் பாதித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீா்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள், பணியாளா்களைக் காக்க வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப... மேலும் பார்க்க