மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்ச...
ஆக.22 இல் வேலைவாய்ப்பு முகாம்
நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக.22) தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தின் சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 10 மணிக்கு நாகா்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், கன்னியாகுமரி மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரில் வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா். முகாமில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.