செய்திகள் :

``இந்தியாவுடனான மோதலில் சீனா உதவவில்லை; எங்கள் திறமை தான்..'' - பாகிஸ்தான் ராணுவத் தளபதி சொல்வதென்ன?

post image

கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி, இந்தியாவில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது இந்திய அரசு.

அதன் ஒரு பகுதியாக ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவே 4 நாள்கள் கடும் மோதல்கள் நடைபெற்றன.

ஆப்பரேஷன் சிந்தூர்

இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு சீனாவிடம் இருந்து உளவுத் தகவல்கள் கிடைத்ததாக இந்தியா தரப்பில் கூறப்பட்டு வந்த சூழலில், அது உண்மைக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர்.

இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் அதிகாரிகளுக்கு ஆற்றிய உரையில், பாகிஸ்தானின் இறையாண்மையை சீர்குலைக்கும் எந்த ஒரு எதிர்பாராத தாக்குதலுக்கும் கட்டுப்பாடுகள் இல்லாத விரிவான உறுதியான பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார் அவர்.

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் பன்யானம் மர்சூஸ் நடவடிக்கை (Operation Bunyanum Marsoos) என அழைக்கப்படுகின்றன.

இந்திய ராணுவம்
ஆபரேஷன் சிந்தூர்: இந்திய ராணுவம்

இந்த தாக்குதலில் வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டதாகக் கூறப்படுவது தவறானது என்றும், நீண்ட நாள்கள் உழைப்பின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் ஏற்படுத்திக்கொண்ட திறன்களை ஒப்புக்கொள்ள மறுப்பதனாலேயே இந்த பொய்கள் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார் அவர்.

இரண்டு நாடுகளுக்கு இடையிலான போரில் மூன்றாவது நாட்டின் பெயரைச் சேர்ப்பது இந்தியாவின் 'முகாம் அரசியல்' முயற்சி என விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், "ஊடக சொல்லாட்சியோ, இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பரமான ஆயுதங்களோ அல்லது அரசியல் கோஷங்களோ போர்களை வெல்வதில்லை. நம்பிக்கை, தொழில்முறை திறன், செயல்பாட்டு தெளிவு, நிறுவன வலிமை மற்றும் தேசிய உறுதிப்பாடு ஆகியவையே வெற்றியைத் தீர்மானிக்கின்றன" என்றும் கூறியுள்ளார்.

மும்பை: ராஜ் தாக்கரே கட்சியினர் போராட்டம்; சிவசேனா அமைச்சர் மீது தாக்குதல்.. என்ன நடந்தது?

மும்பை மீரா பயந்தர் பகுதியில் செயல்பட்டு வரும் ஜோத்பூர் ஸ்வீட்ஸ் என்ற கடையில் பணியாற்றிய ஊழியர் மராத்தி பேசாததால் அவரை மராத்தி பேசச்சொல்லி ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவினர் அடித... மேலும் பார்க்க

``அரசுப் பள்ளிகளில் நவீன வசதி; வளரிளம் பெண்களுக்கு தடுப்பூசி..'' - ரோட்டரி ஆளுநர் தகவல்

மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் நவீன வசதியுடன் கழிப்பிடம், டிஜிட்டல் வகுப்பறைகள், வளர் இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி என ரூ.20 கோடி மதிப்பீட்டில் திட்டங்களை செயல... மேலும் பார்க்க

மதுரை: ``தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு; சட்டம் கொண்டு வர வேண்டும்'' - மமக மாநாட்டில் தீர்மானம்

'வக்பு திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்' என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மதுரையில் நடந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய மக்கள் க... மேலும் பார்க்க

``முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தது..'' - ஆர்.பி.உதயகுமார் சொல்லும் கணக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் அ.தி.மு.க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவ... மேலும் பார்க்க

``அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல'' - முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன.இப்போதைக்கு தி.ம... மேலும் பார்க்க

``பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் சொன்னதை வரவேற்கிறேன்'' - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்... மேலும் பார்க்க