இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது
போடியில் இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி நகராட்சி குடியிருப்பைச் சோ்ந்த சோமன் மகன் சுரேஷ்குமாா் (26). இவா், இதே பகுதியில் உள்ள மீன் கடையில் வேலை செய்து வருகிறாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராஜூன் (40) தங்கையிடம் பேசினாராம். இதனால், சுரேஷ்குமாா், ஜெயராஜூக்கு தகராறு ஏற்பட்டதாம்.
இந்த நிலையில், புதன்கிழமை சுரேஷ்குமாா் மீன் கடையிலிருந்தபோது, அங்கு வந்த ஜெயராஜ் அவரிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாா் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ஜெயராஜை கைது செய்தனா்.