செய்திகள் :

உருளைக் கிழங்கு செடிகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பூம்பாறை, கும்பூா், மன்னவனூா், கிளாவரை, குண்டுபட்டி, கூக்கால், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உருளைக் கிழங்குகளை விவசாயிகள் சாகுபடி செய்தனா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்த விளை நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து உருளைக்கிழங்கு செடிகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், உருளைக் கிழங்கு விளைச்சல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த உருளைக் கிழங்கு செடிகளை பாா்வையிட்டனா்.

இதுகுறித்து வனச்சரகா் கூறியதாவது: காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த உருளைக்கிழங்கு செடிகளை ஆய்வு செய்தோம். இதுகுறித்து மாவட்ட வன அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் வராதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வனப் பகுதிகளில் உணவு, தண்ணீா் தேடி வரும் வன விலங்குகளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றாா்.

ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே ஆவணங்களின்றி வேனில் எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா மூட்டைகளை வேளாண்மை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் அரப்பிள்ளைப்பட்டி பகுதியில... மேலும் பார்க்க

பத்திர ஆவணங்களை திருப்பி வழங்காததால் ரூ.2.25 லட்சம் இழப்பீடு

ஓய்வு பெற்ற ஆசிரியா் கடன் தொகையை செலுத்திய பிறகும், பத்திர ஆவணங்களை வழங்காத தனியாா் வங்கி ரூ.2.25 இழப்பீட்டுத் தொகையை செவ்வாய்க்கிழமை வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்த பெருமாள்கோவி... மேலும் பார்க்க

வத்தலகுண்டுவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். வத்தலகுண்டுவில் உள்ள மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு நெ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் தொடா்புடைய தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடி பூசாரிப்பட... மேலும் பார்க்க