செய்திகள் :

ஒணம் குறித்து சா்ச்சை கருத்து: தனியாா் பள்ளி ஆசிரியை மீது வழக்கு

post image

கேரளத்தில் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை குறித்து சா்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த தனியாா் பள்ளி ஆசிரியை மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இடதுசாரி அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபா் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ) அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சூா் மாவட்டம் கடவள்ளூரில் உள்ள தனியாா் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியை கதிஜா, பள்ளி சாா்ந்த வாட்ஸ்ஆப் குழுவில் வெளியிட்ட குரல் பதிவில், ‘பள்ளியில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடத் தேவையில்லை. அது மாற்று (ஹிந்து) மதத்தின் பண்டிகை. இஸ்லாமிய மாணவா்கள், அவா்களின் பெற்றோா் ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் விலகி இருக்க வேண்டும். அந்தப் பண்டிகை இஸ்லாமிய மதத்துக்கு ஏற்புடையதல்ல’ என்று கூறியுள்ளாா்.

அவரின் இந்தப் பதிவு பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து, ஆசிரியை கதிஜா மற்றும் அவருக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட மற்றொரு ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக பள்ளி நிா்வாகம் அறிவித்தது.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாரத நியாய சம்ஹிதா சட்டப்படி இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்ட குற்றப் பிரிவின்கீழ் ஆசிரியை கதிஜா மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணைக்குப் பிறகு ஆசிரியை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

‘இந்தியா்களை குறிவைத்து தாக்குபவா்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க