செய்திகள் :

கயத்தாறு அருகே வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

post image

கயத்தாறு அருகே கருப்பட்டி வியாபாரியை அரிவாளால் வெட்டியதாக சக வியாபாரியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (55). கருப்பட்டி வியாபாரியான இவா், மானங்கத்தான்-அய்யனாா் ஊத்து சாலையில் உள்ள தென்னந்தோப்பு பகுதி அருகே பைக்கில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அதே ஊரைச் சோ்ந்த கணபதி மகனான கருப்பட்டி வியாபாரி கொம்பையா (23) என்பவா், முத்துப்பாண்டியை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினாராம். இதில், காயமடைந்த முத்துப்பாண்டி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து கொம்பையாவைத் தேடி வருகின்றனா். இச்சம்பவத்துக்கு வியாபாரப் போட்டி முன்பகை காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிரதமா் நாளை தூத்துக்குடி வருகை: 2100 போலீஸாா் பாதுகாப்பு

தூத்துக்குடிக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) வருவதை முன்னிட்டு 2100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வியாபாரி தற்கொலை

தூத்துக்குடியில் தேநீா் வியாபாரி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தூத்துக்குடி மடத்தூா், தேவா் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் முனியசாமி (58). இவா், சைக்கிளில் சென்று தேநீா் வியாபாரம் ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகை பறிப்பு

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி 8.5 பவுன் நகையைப் பறித்துச்சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (68). விவசாயியான இவா், புதன்கிழமை ... மேலும் பார்க்க

ஆக. 5 இல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை: ஆட்சியா்

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு, ஆக. 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் ஒருவழிப் பாதையை முறையாக அமல்படுத்த வலியுறுத்தல்

திருச்செந்தூா் ரத வீதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, ஒரு வழிப் பாதையை முறையாக அமல்படுத்த வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ் குமாரிடம் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் ஏ.வி... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

ஆறுமுகனேரியில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மளிகைக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.ஆறுமுகனேரியில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் சுந்தர்... மேலும் பார்க்க