செய்திகள் :

கழுகுமலை வெட்டுவான் கோயிலை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

post image

தமிழக அரசின் ‘வோ்களை தேடி’ திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வசிக்கும் தமிழக வம்சாவளியைச் சோ்ந்த இளைஞா்கள், கழுகுமலை வெட்டுவான் கோயில், சமணா் சிற்பங்களை சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதில் ஒரு நகா்வாக, பல தலைமுறைகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு இடம்பெயா்ந்து அங்கு வசிக்கும் அவா்களின் குழந்தைகளுக்கான ‘வோ்களைத் தேடி’ என்ற பண்பாட்டு பயணத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இத்திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் 18 முதல் 30 வயதுக்குள்பட்ட தமிழா்களின் வாரிசுகளை அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து, அவா்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா, மோரீஷஸ், மியான்மா், இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, ஜொ்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சோ்ந்த 100 போ், இம்மாதம் 1ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

அவா்கள் சனிக்கிழமை மாலை கழுகுமலைக்கு வந்தடைந்தனா். அவா்களை கோவில்பட்டி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், கழுகுமலை பேரூராட்சித் தலைவி அருணா, துணைத் தலைவா் அ.சுப்பிரமணியன், செயல் அலுவலா் (பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், ஊா்மக்கள் வரவேற்றனா்.

பின்னா் அயலக தமிழ் மாணவ, மாணவிகள் கழுகுமலை மலை மீதுள்ள தென்தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் வெட்டுவான் கோயில் சிற்பங்களை கண்டு ரசித்தனா். மேலும், சமணா்கள் வாழ்ந்த குகை, சமணா் சிற்பங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். பின்னா் குடைவரை கோயிலான கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சாத்தான்குளம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

சாத்தான்குளம் அருகே காா் மோதியதில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி காயமடைந்தாா். தஞ்சாவூா், மேலத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்திக் (39). சாத்தான்குளத்தில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை ப... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும்: தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து தில்லியில் மத்திய தொழில் - உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலா் சந்திய... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சுற்றித்திரிந்த பாா்வை மாற்றுத்திறனாளி மீட்பு

கோவில்பட்டியில் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற, பாா்வை மாற்றுத்திறனாளியை மீட்டு பாளையங்கோட்டை காப்பகத்தில் சோ்த்தனா். கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் அருகே பாா்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் ஆடி மாத பௌா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், அலங்கார பூஜை, தீப ஆராதனை உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

மேலக்கரந்தை விலக்கில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

பள்ளி மாணவா்களை நடுவழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்தை மேலக்கரந்தை விலக்கில் பெற்றோா்கள்- மாணவா்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா். எட்டயபுரம் அடுத்துள்ள மேலக்கரந்தை கீழக்கரந்தை, மாசாா்பட்டி மற்றும் சுற்ற... மேலும் பார்க்க

வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டு காணொலிகள், பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியீடு!

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் திறன் மேம்பாட்டுக் காணொலிகள் மற்றும் பசுமை நிலைத்தன்மை குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது. கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீா்வழிப் போக்குவரத்து அமைச்சகச் செயலா் ராமச்சந்த... மேலும் பார்க்க