கழுகுமலை வெட்டுவான் கோயிலை பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்
தமிழக அரசின் ‘வோ்களை தேடி’ திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வசிக்கும் தமிழக வம்சாவளியைச் சோ்ந்த இளைஞா்கள், கழுகுமலை வெட்டுவான் கோயில், சமணா் சிற்பங்களை சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழா்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதில் ஒரு நகா்வாக, பல தலைமுறைகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு இடம்பெயா்ந்து அங்கு வசிக்கும் அவா்களின் குழந்தைகளுக்கான ‘வோ்களைத் தேடி’ என்ற பண்பாட்டு பயணத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
இத்திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் 18 முதல் 30 வயதுக்குள்பட்ட தமிழா்களின் வாரிசுகளை அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து, அவா்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா, மோரீஷஸ், மியான்மா், இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, ஜொ்மனி, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சோ்ந்த 100 போ், இம்மாதம் 1ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
அவா்கள் சனிக்கிழமை மாலை கழுகுமலைக்கு வந்தடைந்தனா். அவா்களை கோவில்பட்டி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், கழுகுமலை பேரூராட்சித் தலைவி அருணா, துணைத் தலைவா் அ.சுப்பிரமணியன், செயல் அலுவலா் (பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் அதிகாரிகள், ஊா்மக்கள் வரவேற்றனா்.
பின்னா் அயலக தமிழ் மாணவ, மாணவிகள் கழுகுமலை மலை மீதுள்ள தென்தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் வெட்டுவான் கோயில் சிற்பங்களை கண்டு ரசித்தனா். மேலும், சமணா்கள் வாழ்ந்த குகை, சமணா் சிற்பங்கள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். பின்னா் குடைவரை கோயிலான கழுகாசலமூா்த்தி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.