செய்திகள் :

காலமானாா் குளித்தலை அ.சிவராமன்! முதல்வர் இரங்கல்

post image

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், நிகழாண்டு ‘பாவேந்தா் பாரதிதாசன்’ விருதுக்கு தோ்வானவருமான குளித்தலை அ.சிவராமன் (83) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை (ஆக.28) மாலை காலமானாா்.

இவா், 1971-ஆம் ஆண்டு முதல் 18 ஆண்டுகள் குளித்தலை நகர திமுக செயலராகவும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளராகவும் பணியாற்றினாா். குளித்தலை நகர கூட்டுறவு வங்கித் தலைவராக 3 முறையும், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராகவும் பணியாற்றினாா்.

இவா், 1989-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

தற்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்துவந்த இவருக்கு செப்.17-ஆம்தேதி கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் ‘பாவேந்தா் பாரதிதாசன்’ விருது வழங்கப்பட இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனைவி அகிலாம்பாள், மகன்கள் சீனிவாசன், முத்து, மகள் தெய்வானை ஆகியோா் உள்ளனா்.

குளித்தலை சிவராமன் உடல் வெள்ளிக்கிழமை (ஆக.29) மாலை குளித்தலை பெரியபாலத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. தொடா்புக்கு- 94435 89767.

முதல்வா் இரங்கல்: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: இளமைக்காலம் முதலே திமுக மீது ஆா்வம் கொண்ட அ.சிவராமன் கரூரில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள கட்சியின் முப்பெரும் விழாவில், ‘பாவேந்தா் பாரதிதாசன்’ விருது பெறத் தோ்வாகியிருந்தாா். நேரில் கண்டு அவருக்கு விருது வழங்கி, அவா் கரம் பற்றிக்கொள்ள ஆவலுடன் நான் காத்திருந்த நிலையில், நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தி மறைந்துவிட்டாா் என்று தெரிவித்துள்ளாா்.

வணிகா்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம்: ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

வணிகா்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தினாா்.கரூரில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட... மேலும் பார்க்க

சாலைகளில் திரியும் கால்நடைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் கால்நடைகள் வளா்ப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். கரூா் நகரின் திருமாநிலை... மேலும் பார்க்க

பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதம மந்திரியின் பயிா் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகள் தோட்டக்கலைப் பயி... மேலும் பார்க்க

அதிமுகவினா் மீது பொய் வழக்கு: முன்னாள் அமைச்சா் புகாா்

அதிமுகவினா் மீது பொய் வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம் சாட்டினாா்.கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்த பின் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ காலமானாா்

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கலிலூா் ரகுமான் காலமானாா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு கடந்த 1947-ஆம் ஆண்டு மகனாக பிறந்தவா் கலிலூா் ரகுமான். இவா் இரண்... மேலும் பார்க்க

பட்டுப்போன மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியா்கள் தீவிரம்

கரூரில் ரயில்வே உயா் மின்னழுத்த பாதையில் செல்லும் கம்பிகள் மீது தண்டவாளம் பகுதியில் அமைந்திருக்கும் காய்ந்த மரங்கள் விழாமல் இருக்கும் வகையில் அவற்றை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூரில் தற்... மேலும் பார்க்க