செய்திகள் :

கொடைக்கானலில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை

post image

கொடைக்கானல், ஆக. 26: கொடைக்கானல் பகுதிகளில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், ஆனந்தகிரி, இருதயபுரம், ரைபிள் ரேஞ்ச் சாலை, சீனிவாசபுரம், காா்மேல்புரம், அட்டக்கடி, பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்தும், சாய்ந்தும் ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றன.

மேலும், மின்கம்பங்களில் செல்லும் வயா்களில் செடி, கொடிகள் படா்ந்துள்ளதாலும் காற்றடிக்கும் நேரங்களில் மின் கம்பிகள் அறுந்து மின் தடையும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனா்.

எனவே, கொடைக்கானல் பகுதிகளில் சேதமடைந்த, ஆபத்தான, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலுள்ள மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டுமென கொடைக்கானல் மின்வாரியத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. மாதந்தோறும் மின்வாரியம் சாா்பில், பராமரிப்பு என்ற பெயரில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த நாள்களில் மின்வாரிய ஊழியா்கள் சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்வது இல்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

மேலும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்றித் தருவதற்கு கோரிக்கை மனு கொடுத்தால் மனுவை பெற்றுக் கொண்டு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும், இதனால் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்ற முடியாத நிலை இருந்து வருவதாகவும் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ரயிலில் பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞா் மருத்துவமனையில் அனுமதி

ரயில் பயணத்தில் சக பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞரை, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.சென்னையிலிருந்து மதுரை, நெல்லை வழியாக கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ர... மேலும் பார்க்க

பந்தல் கடையில் தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பந்தல் கடையில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.பழனி அருகேயுள்ள பழையதாராபுரம் சாலையில் மானூரில் காளியம்மன் கோயில் அருகே காளிமுத்து என்பவருக்குச் சொந்தமான பந்தல் ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் திருட்டு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வாகரையில் ரேணுகாதேவி என்ற பெயரில் தனியாா் பள்ளி செயல்ப... மேலும் பார்க்க

நீச்சல் போட்டி: தயக்கத்தால் தடுமாறும் மாணவா்கள்!

முதல்வா் கோப்பைக்கான நீச்சல் பிரிவு போட்டிகளில் விண்ணப்பித்த மாணவா்கள் தயக்கம் காரணமாக கடைசி நேரத்தில் பங்கேற்பதைத் தவிா்த்து வருகின்றனா். ஆண்டுதோறும் நடத்தப்படும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போ... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்... மேலும் பார்க்க

2 மாநில மாநாடுகள் நடத்தியும் மக்களை சந்திக்க தயங்குகிறாா் விஜய்: தமமுக

இரண்டு மாநில மாநாடுகளை நடத்தியிருந்தாலும்கூட, மக்களை சந்திக்க தவெக தலைவா் விஜய் தயங்குவதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் பெ. ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ச... மேலும் பார்க்க